Breaking

Tuesday, November 25, 2014

நம்முள் தொலைந்து…




நம்முள் தொலைந்து

உன்னுள் தொலைந்த நீயும் இனிதாய்
என்னுள் தொலைந்த நானும் மகிழ்ந்தோம்

கொட்டிக் கிடந்த பச்சனை ஏக்கம்
பட்டிக் காடாய் பார்த்துச் நிற்கும்

தாள முடியா துன்பத்தின் உச்சம்
மீளா உணர்வில் முடங்கிப் போகும்

முத்தைத் தேடி மூழ்கிய பயணம்
சத்த மிலாமல் சாத்திரம் படிக்கும்

ஆடை முழுவதும் அம்பல மாகி
சாடை யாக சங்கதி கூறும்

எரிமலை வெடிப்பில் எலியின் பயணம்
பரிவே இலாமல் பாடாய்ப் படுத்தும்

பூவைக் கசக்கிப் பிழிந்த தேனோ
பாவை முகத்தில் புன்னகைப் பூக்கும்

எஞ்சிய கவிதையை இளைப்பாறி நின்று
பஞ்ச மிலாது பழுது பார்க்கும்

பதுங்கிய வேகம் புலியெனப் பாய்ந்து
கதும்பி அழுதிட கரையினைச் சேரும்

இருளைப் போர்த்தி இனியது தேடி
பெருமை கொள்ள பொங்கி எழுந்தோம்

காலம் முழுவதும் கனிவாய் சேர்த்த
கோலம் முழுவதும் இனிதே தீர்த்தோம்.