Breaking

Tuesday, November 25, 2014

அழகுதான்…




அழகுதான்

அங்கே
அழகாய் நிற்கிறது
ஓர் அழகு

அவளின்
இமைச்சிறகால்
பறக்கும் பொட்டு.

பௌர்ணமியை விழுங்கும்
கூந்தல் பாம்பு.

இதயம் சிதறும்
ஏவுகனைப் பார்வை

முத்தும் தாங்கும்
மெழுகு கண்ணம்

புன்னகைப் பூக்கும்
உதடுகள்.

மௌனமாய் எனை அழைக்கும்
இமைகள்.