Breaking

Thursday, November 10, 2016

வேண்டும் ஓர் சுதந்திரம்


வேண்டும் ஓர் சுதந்திரம்

வெள்ளையரை விரட்டிவிட்டு
குடிமக்கள் ஆட்சிகொண்டு
கொண்டாடி வருகின்றோம்

ஆண்டுதோறும் சுதந்திரத்தை
பெண்ணினங்கள் இன்றுவரை
சுதந்திரத்தைக் கண்டதில்லை
தீண்டாமைக் கொடுமைகளும்
நம்மைவிட்டு நீங்கவில்லை
வன்கொடுமை சட்டம்கண்டோம்
வலியின்னும் தீரவில்லை
ஏழைபணக் காரனென்ற
ஏற்றங்களும் மாறவில்லை
கல்வியிலும் வேலையிலும்
பணம்ஆட்சி செய்யுதடா
கொள்ளையர்கள் ஆட்சியிலே
கொடுமைபல நடக்குதடா
இதைப்போல பலதுன்பம்
தரணியெங்கும் நடக்கையிலே
சுதந்திர தினத்தைமட்டும்

கொண்டாடி மகிழ்வதேனோ?