பொதுவாக பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம் என அனைத்து விசேஷ நாட்களிலும் இனிப்பை சாப்பிட்டு இனிதாக தொடங்குவதே பிரதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சாதாரணமாக பலரும் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு பரிசாக சாக்லேட்களை தான் வாங்கி கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துவார்கள். எனவே, இதற்கு எல்லாம் காரணம் என்னவென்றால், அந்த சாக்லேட் என்றாலே அனைவருக்கும் ஒரு தெம்பும் , மகிழ்ச்சியும் உண்டாகும்.
ஏனெனில் , அனைத்து வகையான சாக்லேட்கள் தயாரிக்கும் போது அதில் டிரைப்டோஃபன் என்கிற மூலப்பொருள் சேர்ப்படுகிறது. இந்த மூலப்பொருள் உற்சாகத்தை ஏற்படுத்த கூடிய அமிலத்தை சுரக்க வைக்கிறது . அது மூளையின் செயல்பாடுகளை நன்றாக தெளிவாக்கி விடுகிறது .
இதனால் தினமும் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் வராமல் அதை கட்டுப்படுத்தி இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வராமல் தடுக்கும் என்று பிஎம்ஜே என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment