Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 9, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது

பழமொழி :

A light heart lives long.

மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்

பொன்மொழி :

உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.

பொது அறிவு :

1. நீல் ஆம்ஸ்ட்ராங் எந்த வயதில் நிலாவில் இறங்கினார் ?

 68 வது வயதில் .



 2.முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன? 

 68 பற்கள்.

English words & meanings :

grease - lubricant, noun. வழு வழுப்பான எண்ணெய் பசை பொருள். பெயர்ச் சொல். Greece - a country, noun. ஒரு நாடு. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

உடல் பருமன் என்பது இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமன் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களையும் உண்டாக்குகிறது. அதனால்தான் ஒவ்வொருவரும் தங்களின் உடல் பருமனை குறைக்க விரும்புகிறார்கள். உடல் பருமனையும், அதிக எடையையும் நீங்கள் அதிகமாக கொண்டிருந்தால், நீங்கள் ஆளி விதைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம். ஆளி விதைகள் மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வது எடையைக் குறைக்க உதவும். ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துகிறது.

NMMS Q

(-5) - (-7) ன் கூட்டல் தலைகீழி _________ 

விடை: 2. a)2. b)-2. c)0

ஜனவரி 09


வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீதிக்கதை

சுத்தம் தேவை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். ஏண்டா இன்னைக்கு குளிச்சியா என்றாள் அப்புவின் அம்மா. நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடினான்.

அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்தநாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா? என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

மறந்துட்டேன் சார் சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், யானை பல் விளக்குகிறதா என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.

அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை அழுக்குமாமா என்று அழைத்தனர்.

அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். டேய் குளிச்சிட்டுப் போய் படிடா இது அப்புவின் அம்மா. குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா என்பான் அப்பு.

பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.

அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சனையெல்லாம் வரவே வராது என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. முதல் மார்க் ரங்கராஜன் என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.

சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு பளிச் என்று வந்தான். அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா என்று ஒருவன் சொல்ல பையன்கள் கொல்லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

இன்றைய செய்திகள் 09.01.2023


* பல ஆண்டுகளுக்குப் பிறகு மாநில நூலகக் குழு மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

* பள்ளி மேலாண்மை குழு மூலம் காலியாக உள்ள 14019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

* மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

* கோரிக்கையை ஏற்காவிட்டால் குடும்பத்தோடு கோட்டை முற்றுகை: செவிலியர் சங்கத்தினர் பேட்டி.

* இமயமலை எல்லை பகுதிகளில் எதிரி இலக்குகள் மீது குண்டுகளை வீசும் வகையிலான ட்ரோன்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.

* இமயமலைப் பகுதியில் நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட்டின் ஜோஷிமத் நகரம் புதையும் நிலை உருவாகியுள்ளது.

* டுவிட்டரில் அதிரடி மாற்றங்களை அறிவித்த எலான் மஸ்க்.

* சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா பயண கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு.

* தர்மபுரியில் மாநில செஸ் போட்டி-1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

* அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

* ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி.

Today's Headlines

* Minister Anbil Mahes said that after many years, the State Library Committee and the Chennai Municipal Library Commission have formed and issued an ordinance.

 *The Education Department has given approval for the appointment of temporary teachers in 14019 vacant teaching posts by the School Management Committee.

 * Corona Vaccination Proof Mandatory for jallikattu players and bull Owners:- Jallikattu Guidelines Release
                                
*  If our demands are not accepted we will begin our seige at Fort. The Nurse association declared
 
* The Army Research and Development Center (DRDO) has developed drones that can drop bombs on enemy targets in the Himalayan border areas.
                               
*  In Himachal Regions due to land crack and slide the Joshimath city of Uttarakhand is in the danger of burrying under.
 
* Elon Musk announced some drastic changes in Twitter.

*  China eases corona travel restrictions for foreign travelers from today

 * State Chess Tournament at Dharmapuri - 1,000 students participated.

*  Adelaide International Tennis: Djokovic won the title

 * ISL Football: Odisha beat East Bengal
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


No comments:

Post a Comment