SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL

Subscribe Us

Sunday, September 24, 2023

சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கி!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவின் பண சந்தையில் டிஜிட்டல் நாணயத்தை (சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி - CBDC) அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது இந்தியாவின் டிஜிட்டல் நாணய பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

"ஆர்பிஐ வங்கிகளுக்கு இடையே கடன் வாங்கும் சந்தைக்கு செல்ல திட்டமிட்டுள்ளது, குறிப்பாக Call Money Market" என்று அந்த அதிகாரி கூறினார். மத்திய வங்கியின் பார்வையானது, நிதி அமைப்பின் முக்கிய அங்கமான வங்கிகளுக்கிடையேயான கடன் வாங்கும் சந்தையில், பணத் தீர்வுகளை எளிதாக்குவதற்கு, CBDC-க்களை டிஜிட்டல் டோக்கன்களாகப் பயன்படுத்துவதாகும்.

சந்தையில் CBDC-க்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு இடையே குறுகிய கால கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்கும் செயல்முறையை சீரமைத்து நவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் CBDC பொருளாதாரத்தின் சில்லறை மற்றும் மொத்த விற்பனைப் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு முன்னோடி கட்டத்தில் உள்ளது.

மத்திய வங்கியின் இந்த ஸ்ட்ராடெஜிக் நடவடிக்கையானது 2023-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் CBDC பரிவர்த்தனைகளை அடையும் இலக்கைக் கொண்டிருக்கிறது. இந்தியா தொடர்ந்து CBDC-களை அதன் நிதி பரப்பில் ஆராய்ந்து ஒருங்கிணைத்து வருவதால், இந்த வளர்ச்சியானது டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புதிய விஷயங்களை கண்டறியும் நாட்டின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

No comments:

Post a Comment