Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 11, 2023

அரசுப் பள்ளி முன்னாள் மாணவர் மன்றத்தில் 5.6 லட்சம் பேர் பதிவு



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளி நலன் மீது பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களை கண்டறிந்து தொடர்ந்து அவர்கள் பள்ளியுடன் பயணிப்பதை உறுதிசெய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் இதுவரை தலைமை ஆசிரியர்களின் முயற்சியால் 5 லட்சத்து 60,056 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியுடன் இணைந்து பயணிக்க பதிவு செய்தனர். அதில் 3 லட்சத்து 68,390 பேர் அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளனர். மேலும் 15,562 பேர் நன்கொடை வாயிலாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment