Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 16, 2025

வெயில் காலத்தில் ஜில்லுனு தண்ணீர் குடிக்காதீங்க

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வெயில் காலத்தில் ஜில்லுனு தண்ணீர் குடிக்காதீங்க… இந்த ஆபத்துகள் இருக்கு; எச்சரிக்கும் டாக்டர் ஜெயரூபா

வெயில் காலத்தில் ஜில்லுன்னு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் அப்படி செய்வது சரியல்ல என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.



கோடைக்காலம் வந்துவிட்டாலே பலரும் தாகத்தைத் தணிக்க குளிர்ச்சியான நீரை நாடுகிறோம். ஆனால், அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

டாக்டர் ஜெயரூபாவின் கூற்றுப்படி, கோடைகாலத்தில் நாம் விரும்பி அருந்தும் குளிர் நீர் பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கலாம். முக்கியமாக, இது தொண்டை வலியை ஏற்படுத்தும். தொண்டையில் ஏற்படும் அழற்சியால் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொல்லைகள் வரக்கூடும்.

அதுமட்டுமல்லாமல், குளிர் நீர் குடிப்பதால் தலைவலி மற்றும் உடல் வலி போன்ற பிரச்சினைகளும் உருவாகலாம். திடீரென குளிர்ந்த நீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் அதிர்வுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். செரிமான அமைப்பும் இதனால் பாதிக்கப்படுகிறது. அஜீரணம், வாந்தி மற்றும் சில சமயங்களில் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் கூட குளிர் நீரால் ஏற்பட வாய்ப்புள்ளது.

இத்தனை பிரச்சினைகளையும் தவிர்க்க டாக்டர் ஜெயரூபா ஒரு எளிய தீர்வை முன்வைக்கிறார். அவர் குளிர் நீருக்கு பதிலாக அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரை குடிக்குமாறு பரிந்துரைக்கிறார். அறை வெப்பநிலையில் உள்ள நீர் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தாகத்தைத் தணிக்கும்.

எனவே, கோடைக்காலத்தில் குளிர்ச்சியான நீர் அதிகம் குடிக்காமல் அறை வெப்பநிலையில் உள்ள நீரை அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. டாக்டர் ஜெயரூபாவின் இந்த அறிவுரை, கோடைக்கால நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த வழியாகும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News