நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது. நிகழ் கல்வியாண்டில் தமிழக இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்றது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். என இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பமே விநியோகிக்கப்பட்டது.
23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 38,271 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
இது தவிர, இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஜூலை 1-இல் கலந்தாய்வு தொடக்கம்: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 28-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


