JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, September 1, 2020

நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய பரிசோதனை

இன்றைய காலகட்டத்தில் ஒரு நீரிழிவு நோயாளியின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, ஹெச்.பி.ஏ.1.சி. அல்லது கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அல்லது கிளைகோஹெமோகுளோபின் முக்கிய பங்கு வகிக்கிறது . 

ஏனெனில் , ரத்த சர்க்கரை அளவை 2 அல்லது 3 மாத காலத்திற்கு ஒரு முறை கண்காணிக்க ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் சர்க்கரை நோயாளிகளுக்கு எச்.பி.ஏ 1 சி பரிசோதனையை நடத்துவது மிக முக்கியமானது. 

இது ரத்த சர்க்கரை அளவுகள் வரம்பில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. தேவைப்பட்டால் அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை சரிசெய்ய ஒரு மருத்துவருக்கும் இந்த சோதனை பெரிதும் வழி காட்டுகிறது

இந்த சோதனை ஆரோக்கியமான நபருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் வழி செய்யும் .

No comments:

Post a Comment