Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 21, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.12.2022


திருக்குறள் :

பால்: அறத்துப்பால் 

இயல்: இல்லறவியல். 

அதிகாரம்:இனியவை கூறல் 

குறள்:93 

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் 
ஆம் இன்சொ லினதே அறம். 

பொருள்: 

கண்டவுடன் முகமலர்ச்சியுடன் பார்த்து பேசி, உள்ளன்புடன் பழகுவதே நல்லறமாகும்.

பழமொழி :

Many hands make light work.

பல கரங்கள் பணியை இலகுவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.

 2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "

பொன்மொழி :

நீங்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போதே அதை தீர்க்கத் தொடங்குகிறீர்கள். 

--ரூடி கியுலியானி.

பொது அறிவு :

1. மருத்துவத்தில் மிகவும் பயன்படும் ஓர் இந்திய தாவரம் எது? 

வேம்பு .

 2. பாலை தயிராக்கும் பாக்டீரியா எது? 

லாக்டோ பாஸிலஸ்.

English words & meanings :

feet - plural of feet. noun.பாதங்கள். பெயர்ச் சொல். feat - achievement. noun அருஞ்செயல். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கொய்யா இலைகள் நம்முடைய செரிமான அமைப்பில் உள்ள தேவையற்ற, உடலுக்குத் தீமை செய்யும் நுண்ணுயிரிகளை கொல்லும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கின்றன.
இது குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவும். அதனால் மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அமிலத்தன்மை சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யவும் உதவும்.

NMMS Q

கொடுக்கப்பட்ட நான்கு வார்த்தைகளில் தொடர்பற்றதாக அமையும் வார்த்தை: a) talking b)speaking c)smelling. d)crying விடை: smelling

டிசம்பர் 21


ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்


எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு:  பிறப்பு: :திசம்பர் 211972), அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

நீதிக்கதை

இனிப்பைத் தின்ற எறும்பு

அவலூரில் கிழவன் ஒருவன் இனிப்பு கடை நடத்தி வந்தான். சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைப் பிடிக்காது. ஆனால், ஏதேனும் வேலை செய்வதற்கு மட்டும் அழைப்பான். 

இந்த வேலையை முடியுங்கள் இனிப்பு தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமற்றி வேலைவாங்குவார். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. 

மதிய நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த அவன் மகன், கடையைப் பார்த்துக்கொள்வான். 

அந்தக் கடைக்காரன் ஒரு நாள் பலகாரங்கள் வைப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்று முப்பது பானைகள் செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்? என்று கேட்டான். ஒரு வாரத்தில் தயாராகி விடும், என்றனர். 

குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர சிறுவர்களை அழைத்து மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வாருங்கள். நான் இனிப்பு தருகிறேன் என்றார். 

அவர் சொன்னதை நம்பி அவர்களும் பானைகளை கடைக்குக் கொண்டு வந்தனர். நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியாக இருந்தனர் சிறுவர்கள். 

எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம், என்றனர் சிறுவர்கள். உங்களுக்கு இனிப்பு தரமாட்டேன் என்று சொல்லி விரட்டியடித்தான் கடைக்காரன். 

தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த சதீஷ், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார். 

சதீஷ் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார், என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். கவலைப்படாதிற்கள்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் வெளியே நில்லுங்கள், என்று சொல்லிவிட்டு சதீஷ், கடைக்குள் நுழைந்தார். 

அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான். 

இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த சதீஷ், இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், பணம் தராமல் எதையும் தொடக்கூடாது, என்று கத்தினான். 

தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்றான் சதீஷ் அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது, என்றான் சிறுவன். 

தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே! எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா? என்று கத்தினான். இதைக் கேட்ட சதீஷ், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே இனிப்பு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு சிறுவர்களுக்குக் கொடுக்கச் சென்றார். இதைப் பார்த்த அவன், அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை, என்று கத்தினான். 

இதைக் கேட்ட கடைக்காரன் கோபமடைந்தான். என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? என்று திட்டினான். பின்பு, இனிப்புகளை சிறுவர்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன், என்று சொல்லி சதீஷ், கிளம்பிவிட்டான். 

தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நின்றான். 

நீதி :
பிறரை ஏமாற்றுதல் கூடாது.

இன்றைய செய்திகள்

21.12.22

* தமிழ்நாடு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

* “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும்” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

* தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் ஒரு கி.மீ.க்கு கல்குவாரி, சுரங்கம் செயல்படலாம் - தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை.

* வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் காலை வேளைகளில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

* பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும் - வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்.

* சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் தீவிரமாகி இருப்பது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

* கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து.

* 'சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்' - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு.

Today's Headlines

* The Government of Tamil Nadu has set up a high-level committee to provide 4% reservation for differently-abled persons in the promotion of Tamil Nadu government jobs.

 * Tamil Nadu Power Minister Senthil Balaji said that after the completion of the installation of smart meters, the amount of electricity will be calculated every month.

 * The Madurai branch of the Madras High Court has directed the Tamil Nadu government to take necessary steps for the development of the Tamil language.

 * Quarrying and mining can be carried out per km in the protected forest area - Tamil Nadu Government Ordinance lifting the ban.

 * Due to heavy snowfall in the northern states, people are facing a lot of difficulties in the mornings.

 * 10 Crore Passport Holders - Ministry of External Affairs Information

 * The United States has said that the spread of the Coronavirus in China has made the world concerned.

*  England won the series completely by defeating Pakistan in the last Test.

*  'I will continue to play in international football matches' - Argentina captain Messi announced.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment