சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : 108
கல்வித் தகுதி :
பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, சிஏ, டெக்ஸ்டைல் துறையில் டிப்ளமோ பெற்றவர்கள், எம்.எஸ்சி, பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
குரூப் பி பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். குரூப் சி பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1000/- விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக http://www.kvic.org.in/ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.kvic.org.in/kvicres/update/others/Detailed_Advertisement_20122019.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2020