• Home
  • About
  • Contact
  • வேலைவாய்ப்பு
  • தமிழ் நூல்கள்
  • FORMS
  • GOVERNMENT ORDERS
  • TEXT BOOK

தமிழ்க்கடல்
  • Home
  • 10TH STD
  • _10TH TAMIL
  • _10TH ENGLISH
  • _10TH MATHS
  • _10TH SCIENCE
  • _10TH SOCIAL SCIENCE
  • 12TH STD
  • _12TH TAMIL
  • _12TH ENGLISH
  • _12TH MATHS
  • _12TH PHYSICS
  • _12TH CHEMISTRY
  • _ 12TH BIOLOGY
  • _12TH BOTANY
  • _12TH ZOOLOGY
  • _12TH COMPUTER
  • _12TH COMPUTER APPLICATION
  • _12TH HISTORY
  • _12TH GEOGRAPHY
  • _12TH COMMERCE
  • _12TH ECONOMICS
  • _12TH ACCOUNTANCY
  • _12TH STATISTICS
  • 11TH STD
  • _11TH TAMIL
  • _11TH ENGLISH
  • _11TH MATHS
  • _11TH PHYSICS
  • _11TH CHEMISTRY
  • _11TH BIOLOGY
  • _11TH BOTANY
  • _11TH COMPUTER
  • _11TH COMPUTER APPLICATION
  • _11TH HISTORY
  • _11TH COMMERCE
  • _11TH ECONOMICS
  • _11TH ACCOUNTANCY
  • _11TH BUSINESS MATHS
  • 9TH STD
  • _9TH TAMIL
  • _9TH ENGLISH
  • _9TH MATHS
  • _9TH SCIENCE
  • _9TH SOCIAL SCIENCE
  • 8TH STD
  • _8TH TAMIL
  • _8TH ENGLISH
  • _8TH MATHS
  • _8TH SCIENCE
  • _8TH SOCIAL SCIENCE
  • 7TH STD
  • _7TH TAMIL
  • _7TH ENGLISH
  • _7TH MATHS
  • _7TH SCIENCE
  • _7TH SOCIAL SCIENCE
  • 6TH STD
  • _6TH TAMIL
  • _6TH ENGLISH
  • _6TH MATHS
  • _6TH SCIENCE
  • _6TH SOCIAL SCIENCE
  • STUDY MATERIALS
  • _TNPSC
  • _TRB
  • _TET
  • _POLICE

Breaking

Showing posts with label யோகாசனம். Show all posts
Showing posts with label யோகாசனம். Show all posts

Saturday, August 6, 2022

 முகுள முத்திரையை தொடர்ந்து செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
யோகாசனம் Saturday, August 06, 2022

முகுள முத்திரையை தொடர்ந்து செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!

பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.

உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் முகுள முத்திரையை தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

செய்முறை:

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற விரல்களை குவித்து படத்தில் உள்ளதுபோல் மேல்நோக்கி வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று. நான்கு விரல் நுனிகளையும் பெருவிரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடிக்க வேண்டும்.

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மனசக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையும்.

நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

பலன்கள்:

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Saturday, August 06, 2022 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Sunday, September 19, 2021

யோகாசனம் Sunday, September 19, 2021

இரத்த அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் சாந்தி ஆசனம்



மன அமைதி

இந்த ஆசனம் மன அமைதி தரும். மன அழுத்தம் நீங்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் வராமல் சமமாக இயங்க செய்யும். உயர் / குறைவான இரத்த அழுத்தத்தை சரி படுத்தும்.

பஞ்ச பூதம்

உடலில் பஞ்ச பூதம் சமமாக இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

இதயம்

இதயம் நன்கு திடமாக செயல்படும். இதய வலி வராது.

பிராண ஆற்றல்

பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Sunday, September 19, 2021 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்
யோகாசனம் Sunday, September 19, 2021

செரியாமை, மலச்சிக்கல் நீக்கும் யோகா


செரியாமை, மலச்சிக்கல் நீக்கும் தனுராசனம் (Indigestion & Constipation Cure Yoga – Dhanurasana)

செய்முறை:

  • விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
  • இரு கால் பாதங்களை முதுகை நோக்கி கொண்டு வந்து, கைகளை பின்னால் கொண்டு வந்து, கைகளால் காலின் கணுக்கால் பகுதியை இருக்கமாக பற்றி பிடிக்கவும்.
  • தலை, மார்பு, கால்கள் ஒரு சேர உயர்த்தி, மூச்சை உள் இழுத்துத் தூக்கவும்.
  • அடிவயிறு மட்டும் விரிப்பின் மீது இருக்க வேண்டும்.
  • மூச்சை அடக்கி பதினைந்து வினாடிகள் இருக்கவும்.
  • பின் கைகளை பிரித்து கால்களை நீட்டவும்.
  • சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் செய்யவும்.
  • மூன்று முறைகள் தினமும் செய்யவும்.


முக்கியக் குறிப்பு:

  • கல்லிரல் வீக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.
  • பெண்கள் கருவுற்ற சமயத்தில் செய்யக்கூடாது.
  • இருதய பலவீனம், இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது.

தனுராசனத்தின் பலன்கள்:


  • வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புக்கள் பலன் பெறுகின்றன.
  • அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது.
  • உடல் எடை, தொப்பை குறையும்.
  • வயிற்று பொருமல், உப்பசம், வாயு கோளாறுகள் குணமடையும்.
  • முதுகுத்தண்டு பலப்படும்.
  • நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா குணமாகும்.
  • நீரிழவு குணமாகும். கணையம் ஒழுங்காக இன்சுலினை சுரக்க செய்யும்.
  • கூன் முதுகு நிமிரும்.
  • ரத்த ஓட்டம் சிறப்பாக செயல்படும்.
  • பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் ஏற்படும் பெருத்த வயிறு குறைக்கும்.
  • மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
  • மாணவர்களுக்கு நியாபக சக்தி அதிகமாகும்.
  • சோம்பல் நீங்கும்.
  • அடிக்கடி கோபப்படும் குணத்தை மாற்றிவிடும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Sunday, September 19, 2021 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Wednesday, June 23, 2021

யோகாசனம் Wednesday, June 23, 2021

சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக்கும் தனுராசனம்..!


வில் போன்று தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது இந்த ஆசனம். தனுர் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு வில் என்று பொருள். இது சலபாசனமும் புஜங்காசனமும் இணைந்து உருவான ஆசனம்.

உடலின் தொப்புளுக்கு மேற்பட்ட பகுதி புஜங்காசனத்தில் இருக்க, கீழ்ப்பகுதி சலபாசனத் தோற்றத்தில் இருக்கும். அதனுடன் கைகள், கால்களைப் பிடித்திருக்க முழங்கால் மடங்கி வில்போன்று தோற்றமளிக்கும். முதுகெலும்பு பின்புறம் வளையும் புஜங்காசனம் ஒருவகை. தனுராசனத்தில் வேறு வகையாக அமையும்.

மனம் : முதுகெலும்பு ,அடிவயிறு, தொடைப்பகுதி.

மூச்சின் கவனம் :

கால்களையும், உடலையும் உயர்த்தும்போது உள்மூச்சு,

ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, விடும்போது வெளிமூச்சு.

செய்முறை :

1. ஒரு விரிப்பை நீளவாட்டில் மடித்து அதன்மீது குப்புறப்படுக்கவும்.

2. கால்களை நீட்டிக் கொள்ளவும்.

3. இடக்கை விரலால் வலக்கால் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ளவும்.

4. மெதுவாக இடக்காலை பின்புறமாக மடக்கி வரவும்.

5. இந்த நிலையில் தொடை வயிறுக்குச் சமீபம் அமையும்.

6. இப்போது கைகள் இரண்டையும் முதுகுப்புறமாக நீட்டி மடங்கிய கால்களைப் பற்றிக் கொள்ளவும்.

7. இந்நிலையில் வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படிந்திருக்க வேண்டும். தலை தூக்கிய நிலையில் இருக்க வேண்டும்.

இந்த ஆசனத்தை இரண்டு நிமிடம் செய்யலாம்.

பயன்கள் :

1. ஆஸ்துமா, மார்புச்சளி, ஈசினோபீலியா நோய்கள் குணமாகும்.

2. இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

3. அட்ரீனல் நாளத்தை நன்கு இயக்கி உடல் முழுவதும் சுறுசுறுப்படையச் செய்யும்.

4. பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.

5. நரம்புகளும் முதுகெலும்பும் வளையும். கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும்.

6. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச்சதை குறையும்.

7. அஜீரணம், வயிற்று வலி நீங்கும்.

இது ஒரு அற்புதமான ஆசனம். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். அஜீரணம், மலச்சிக்கல் நீங்கும். மார்பு பலம் பெறும். மார்புச்சளி, சைனஸ், ஆஸ்துமா, ஈசினோபீலியா, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சிறுநீரகம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். சிறுநீரக கோளாறு நீங்கும். முதுகுவலி நீங்கும். தொப்பை, ஊளைச்சதை முற்றிலும் குறையும். இளமையும், சுறுசுறுப்பும் உண்டாகும்.

உடல் ரீதியான பலன்கள் :

உடலை மெலிய வைத்து சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது

இடுப்பை வளைக்க உதவும் ரெக்டி தசைகள் நன்கு ஆரோக்கியம் அடைகின்றன.

வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பு கரைகிறது

இரத்தக்குழாய் சுத்தமடையும்

முதுகெலும்பு நன்கு வலுப்பெறும்.

அட்ரினல் சுரப்பி நன்கு வலுப்பெறும்

அடிவயிற்றுக்கு நல்ல அழுத்தம் கிடைத்து, மலம் மலக் குடலுக்கு தள்ளப்படும்.

இனப் பெருக்க மண்டலம் வலிமை பெறும்.

குணமாகும் நோய்கள் :

சுவாசக் கோளாறுகள், முதுகு வலி, மூட்டு சம்பந்தமானநோய்கள், நீரிழிவு ,இரப்பை, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு நல்லது

ஜீரணசக்தியை அதிகப் படுத்துகிறது

மாதவிடாய் பிரச்சனைகள் தீரும் , தூக்கமின்மை விலகும்


ஆன்மீக பலன்கள் :

இது சோம்பலை நீக்கி உடலை இது சுறுசுறுப்பாக்குகிறது.

எச்சரிக்கை :

இதய நோயாளிகள் , குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Wednesday, June 23, 2021 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Tuesday, June 22, 2021

யோகாசனம் Tuesday, June 22, 2021

இளமைத் தன்மையை நீட்டிக்கும் புஜங்காசனம்




புஜங்காசனம்..!

யோகாசனம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஏன் ஒவ்வொரு செல்லிற்கும் ஏற்றபடி ஒவ்வொரு விதமான நன்மைகளை தரும்.

புஜங் என்றால் பாம்பு. ஆசனம் என்றால் செய்யும் முறை. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என பொருள் தருகிறது.

இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற யோகா. எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால், முதுகுத் தண்டு பலம் பெற்று முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

கிடந்த நிலை ஆசனங்களின் முதல்நிலையாக புஜங்காசனத்தை ஸ்வார்த்தம் சத் சங்கம் அறிவிக்கிறது.

மனம் :

முதுகெலும்பு , அடிவயிறு.

மூச்சின் கவனம் :

உடலை உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும்போது வெளிமூச்சு.

செய்யும் முறை:

முதலில் ஒரு விரிக்கையை தரையில் விரியுங்கள்.வெறும் தரையில் யோகாசனம் செய்யக் கூடாது. இப்போது குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைக்க வேண்டும்.

கால்விரல்கள் தரையில் படவேண்டும். குதிகால்கள் வானம் பார்த்தபடி இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை ஆழ்ந்து விடுங்கள்.

இந்த நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டும். இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னாடி வளையுங்கள்.

இடுப்பு வரை தரையில் ஒட்டி இருக்க வேண்டும். கைகள் வளைக்காமல் நேராக ஊன்றி இருக்க வேண்டும். இந்த நிலை தான் பாம்பு நிலை ஆகும்.

இப்போது மெதுவாய் மூச்சு விடுங்கள். 15 வினாடி அப்படியே இருக்க வேண்டும். அதன் பின் மறுபடியும் பழைய நிலைக்கு வாருங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்யலாம்.

பலன்கள் :

முதுகெலும்பு பலம் பெறுகிறது .

முதுகு வலி குறைகிறது .

தொப்பையைக் குறைக்கிறது.

ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களை நீக்குகிறது.

புஜங்காசனம், இரத்த வெள்ளையணுக்களை வெளியேற்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும்.

பெண்களுக்கான அற்புத பலன்களை இந்த ஆசனம் தரும். முகுகெலும்பை பலப்படுத்தும்.மலச்சிக்கல் அகலும். முதுகுவலி, இடுப்பு வலி நீங்கும். இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்கும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தோள் மற்றும் பின் முதுகிற்கு வலிமையை அளிக்கும்.

இக்கால உணவு முறைகளினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பிட்டு சொன்னால் மாதவிடாய் கோளாறுகள். எவ்வளவு செலவு செய்தாலும் ஒன்றுமே நடக்காது. கவலை வேண்டாம்.இவ்வாசனத்தை செய்து பாருங்கள் பலன் தெரியும்.

பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.

உடல் ரீதியான பலன்கள் :

எடை குறையும், மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும் உறுதியானதாகவும் ஆகிறது

கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.

மார்புத் தசைகள் விரிவடைந்து முதுகுத்தண்டு நரம்புகள் ஊக்கமடைகின்றன.

இளமைத் தன்மை நீடிக்கும்.


குணமாகும் நோய்கள் :

அதிக வேலைப் பளுவினால் வரும் முதுகுவலி, கழுத்து வலி, கழுத்துப் பிடிப்பு , கூன்முதுகு, நுரையீரல் அலர்ஜி, ஆஸ்துமா , ஜீரணக் கோளாறுகள் , வயிற்றுக்கொழுப்பு போன்றவற்றை சரிசெய்கிறது.

ஜீரண சக்தி ,குடலின் இயக்கம் ஆகியவை அதிகரிகின்றன.

சர்க்கரை நோய் குணமாகும்.

ஆன்மீக பலன்கள் :

குண்டலினியின் எழுச்சி உடல் அளவில் வெப்பம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக உணரப் படுகிறது.

நன்மைகள்:

ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், இரத்தத்தில் சளி போன்ற பலவிதமான உடல் உபாதைகளை குணப்படுத்தி விடும்.

கிட்னியை பலப்படுத்த இந்த ஆசனத்தை செய்யலாம்.

பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப் போதல், அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்றுவலி போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த ஆசனம் தீர்வாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி எளிதில் கிடைக்கும்.

மலசிக்கல் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும்.


முக்கிய குறிப்பு:

இந்த ஆசனத்தை பொறுமையாக நிதானமாக செய்வது அவசியமாகும்.

ஆரம்ப கட்டத்திலே முழுமையான நிலை வராது. எனவே தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் பின்பு நன்கு பழகிவிடும்.

முதுகு தண்டில் வலி உள்ளவர்கள், முதுகு தண்டு விலகி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை மருத்துவரை அணுகி பின்பு செய்வது நன்மை பயக்கும்.

சாதரண கழுத்து வலி, அலுவகங்களில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் வலி, அதிக தூரம் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி போன்றவற்றை இந்த ஆசனம் விரைவில் குணமாக்கி விடும்.

அதுமட்டுமில்லாமல் கழுத்து முதுகு, நடு முதுகு, அடி முதுகு ஆகியவற்றின் எலும்புகளில் உள்ள குறைகளை நீக்குகிறது.

எச்சரிக்கை :

குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Tuesday, June 22, 2021 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Monday, June 21, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 யோகாசனங்கள்..!
யோகாசனம் Monday, June 21, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 யோகாசனங்கள்..!

நாள்தோறும் சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உடலில் இருக்கும் மெட்டபாலிசம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சுவாசப் பிரச்சனைகளையும் தீர்க்க உதவும். கொரோனா பெருந்தொற்று நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையை நேரடியாக பாதித்தது. இதில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு யோகாசனம் மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆகும். அந்தவகையில் சுவாசப் பாதை மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும் எளிமையான 5 யோகாசனங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பாலாசனம் அல்லது குழந்தை ஆசனம்

இந்த ஆசனத்தை முறையாக செய்து வந்தால் கோபம் மற்றும் பதட்டத்தில் இருந்துவிடுபட்டு புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இடுப்பின் கீழ்பகுதியில் இருக்கும் அழுத்தம், சோர்வு ஆகியவை நீங்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

செய்முறை

தரைவிரிப்பில் முழங்காலிட்டு படுத்துக்கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் தொடையின் மீது பட்டவாறு பின்புறமாக நீட்டிக் கொள்ள வேண்டும். தலையை இரண்டு தொடைப்பகுதிக்கு இடையில் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப் பகுதியானது முழங்காலிட்டு இருக்கும் முன்பக்க தொடைமீது இருக்க வேண்டும். தற்போது பின்புறமாக நீட்டி இருக்கும் கையை மெதுவாக முன்பக்கமாக நீட்டுங்கள். அப்போது காற்றை உள்ளிழுக்க வேண்டும். பழைய நிலைக்கு திரும்பும்போது காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.

தனுரசனா

தனுரசனா ஆசனம் செரிமான பிரச்சனைகளை நீர்ப்பதற்கும், வாயுத்தொல்லை நீங்குவதற்கும் உதவுகிறது. முதுகு தண்டுவடத்தில் இருக்கும் இறுக்கம் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆற்றல் குறையாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. ரத்த ஓட்டம் சீராக உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்றுவருவதில் தனுரசனா முக்கிய பங்காற்றுகிறது.

செய்முறை

விரிக்கப்பட்ட தரைவிரிப்பில் முகம் மற்றும் கண் பகுதி நிலத்தை பார்க்குமாறு படுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட வாக்கில் படுத்திருக்கும் நீங்கள், உங்கள் கால்களை பின்புறத்தில் மேல்நோக்கி உயர்த்துங்கள். முன் பக்க தலை மற்றும் கைகளையும் உயர்த்தி, கைகளால் கால்கள் இரண்டையும் நன்றாக பற்றிக்கொள்ளுங்கள். உடலானது வில் போல் வளைந்திருக்கும். உங்களால் முடிந்த வரை உடலை வளைத்துக்கொள்ளலாம். அதேநிலையில், 4 முதல் 5 முறை மூச்சை உள்ளிழுத்து வெளியேவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

புஜங்காசனா (Bhujangaasana)

சமஸ்கிருத மொழியில் புஜங்கா என்பது ராஜ நாகம் தலையை உயர்த்தி இருக்கும் நிலை. முதுகுத் தண்டை பலப்படுத்துவதற்கு செய்யப்படும் இந்த யோகாசனம் அனைவரும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு பயிற்சியாகும். செரிமானத்தை அதிகரிக்கவும், கல்லீரலில் இருக்கும் அழுத்தத்தை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைவதற்கும் உதவுகிறது.

செய்முறை

வயிற்றுப் பகுதி தரையில்படுமாறு படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், கால்கள் இரண்டும் இணைந்திருக்கும் நிலையில், இடுப்புப் பகுதி வரை தரையில்படுமாறும், தலைப் பகுதியை கைகளில் உதவியால் மேல்நோக்கி இருக்குமாறு உடலை வளைக்க வேண்டும். அதேநிலையில் 4 முதல் 5 நொடிகள் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்யும்போது மேற்கூறிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

பாசிமோட்டனாசனா

செரிமானம் மற்றும் சோர்வை முற்றிலுமாக விரட்டும் பாசிமோட்டனாசனா, மூளையை மிகவும் சாந்தமாக இருக்க உதவுகிறது. கோவிட் வைரஸூக்கு பின் ஏற்படும் பக்கவிளைவுகளை கட்டுப்படுத்துகிறது.

செய்முறை

கால்களை முன்பக்கமாக நீட்டியவாறு தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் காலின் நடுப்பாதங்களை பிடித்தவாறு, தலையை முழங்காலுக்கு கீழாக வருமாறு உடலை வளைக்க வேண்டும். நெஞ்சுப்பகுதி முழங்கால் மீது இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போது உங்களின் தலைப்பகுதியானது பாதத்துக்கு அருகாமையில் இருக்கும் கீழ் முட்டிக்கு அருகில் இருக்கும். 4 முதல் 5 நொடிகள் அதே நிலையில் இருந்து பின் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

விராபத்ராசனா

இந்த ஆசனம் பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், முறையாக செய்வதற்கு உங்களிடம் ஆற்றல் இருக்க வேண்டும். தசைகளில் இலகு தன்மையை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது இதயம் மற்றும் சுவாசத்துக்கு மிகச்சிறந்த பயிற்சி ஆகும்.

செய்முறை

முதலில் நேராக நின்று கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுத்தவாறு இடது காலை 3 முதல் 4 அடி இடைவெளியில் அகற்றி வையுங்கள். 90 டிகிரி அளவில் இருக்குமாறு இடது காலை வைத்து, வலது காலை மடித்து நில்லுங்கள். கைகள் இரண்டையும் வலது கால் இருக்கும் திசையில் வலது கையையும், பின்பக்கமாக இடது கையையும் ஒரே நேர்கோட்டில் நீட்டிக்கொள்ளுங்கள். பின்பு, தலையை வலது மற்றும் இடது பக்கங்களை நோக்கி திருப்புங்கள். இந்தப் பயிற்சியை இரண்டு மூன்று முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Monday, June 21, 2021 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Monday, May 10, 2021

யோகாசனம் Monday, May 10, 2021

ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் லிங்க முத்திரை மதுரை பெண் சித்த மருத்துவரின் ஆய்வுக்கு ஐஐடி அங்கீகாரம்



தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Monday, May 10, 2021 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Thursday, August 13, 2020

சளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்
யோகாசனம் Thursday, August 13, 2020

சளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்

ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனைக்கு பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.

பிராணாயாமங்கள்

ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனைக்கு பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.

பஸ்திரிகா பிராணயாமம்

தரையில் ஆசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து, முதுகு போன்றவற்றை நேராக வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கைகளை நேராக வைத்துக்கொண்டு இரு நாசித்துவாரங்களின் வழியாக வேகமாக மூச்சை உள்ளிழுத்து, வேகமாக வெளியே விட வேண்டும். இப்படி ஒருவேளைக்கு 10 முறை செய்ய வேண்டும். இதைச் செய்வதால், நெஞ்சில் கட்டியாக இருக்கும் சளி மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கு அடைத்துக்கொண்டு சுவாசிக்கச் சிரமப்பட்டு, வாயால் சுவாசிப்பவர்கள் இந்தப் பயிற்சிகளின் மூலம் நல்ல பலன் பெறலாம். இவை நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தரும்.

நாடி சுத்தி பிராணயாமம்

வலது கை ஆள்காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் மடித்து வைத்து, வலது நாசியில் கட்டை விரலும், இடது நாசியில் மோதிர விரலாலும் மூடிக்கொள்ள வேண்டும். இடதுபக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, வலப்பக்க நாசியின் வழியாக வெளியேவிட வேண்டும். பிறகு வலது பக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வெளியேவிட வேண்டும். இதேபோல் 20 முறை செய்யலாம். இந்தப் பயிற்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்தும். மனதை ஒருநிலைப்படுத்த உதவும். இதை எல்லா வயதினரும் செய்யலாம்.

பிராமரி பிராணயாமம்

இரண்டு கையின் ஆள்காட்டி விரலைக் கொண்டு அதனதன் பக்கம் உள்ள காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிடும்போது `ம் கார...’ (M kara) என்று உச்சரிக்க வேண்டும். இதேபோல் 10 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், அடிக்கடி தொண்டையில் வரும் தொற்றுகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொண்டை கரகரப்பாக இருப்பது, தொண்டையில் சளி அடைத்துக்கொள்வது போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சூரிய நமஸ்காரம், மர்ஜரி ஆசனம், வியாகராசனம், பர்வதாசனம், ஷாஷங்காசனம், பத்மாசனம் போன்ற யோகா பயிற்சிகளைச் செய்யலாம். இந்த யோகாசனங்களை சுவாசக் குறைபாடுகள், நுரையீரல் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் செய்யலாம். இந்த ஆசனங்கள் உடலை வலிமையாக்கவும் உதவும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Thursday, August 13, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Sunday, April 26, 2020

யோகாசனம் செய்யும் போது இதை மறக்காதீங்க
யோகாசனம் Sunday, April 26, 2020

யோகாசனம் செய்யும் போது இதை மறக்காதீங்க


பயிற்சி செய்யும் இடம் நல்ல தூய்மையான காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். வெறும்தரை பயிற்சிக்கு ஏற்றதல்ல. எனவே ஜமுக்காளத்தை நான்காக மடித்து விரித்து அதன் மேல் உட்கார்ந்து பயிற்சி செய்யவும். இறுக்கமான ஆடைகள் பயிற்சிக்கு ஏற்றதல்ல. பயிற்சியின்போது உடல் தடையில்லாமல் இயங்குவதற்கு ஏற்றவாறு குறைந்த அளவு ஆடைகளே போதுமானது.
பயிற்சியின்போது வயிறு காலியாக இருக்கவேண்டும். காலையில் உணவருந்துவதற்கு முன்பும், மாலையில் உணவருந்தி 3 மணிநேரம் கழித்த பின்பும் பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சியில் ஈடுபடும் முன் மலசலம் கழித்து சிறிது வெந்நீர் அருந்திவிட்டு பயிற்சியில் ஈடுபடலாம்.
முதலிலேயே கடினமான யோகாசனப் பயிற்சிகளை செய்ய முயற்சிக்க வேண்டாம். செய்வதற்கு எளிதான யோகாசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்து உடலை பழக்கப்படுத்தவும்.
அரைமணி நேரம் அல்லது 1 மணி நேரம் பயிற்சில் ஈடுபடுகிறீர்கள் என்றால் குறைந்தது 4 முதல் 6 வகையான ஆசனங்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்வீர்கள் அல்லவா அப்படி பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளும் ஆசனம் முதல் ஆசனம் உடலை முன்னோக்கி வளைக்கும் படியான ஆசனமாக இருந்தால் அடுத்து செய்யும் இரண்டாவது ஆசனம் உடலை பின்னோக்கி வளைக்கும் ஆசனத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்ய வேண்டும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Sunday, April 26, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Friday, April 24, 2020

அழகான தோற்றத்துக்கு அர்த்தக்கட்டி சக்ராசனம்
யோகாசனம் Friday, April 24, 2020

அழகான தோற்றத்துக்கு அர்த்தக்கட்டி சக்ராசனம்




செய்முறை :

விரிப்பின் மீது இருகால்களையும் ஒன்று சேர்த்து நிற்கவும். உங்கள் வலது கையை பக்கவாட்டில் உயர்த்தி, வலது காதுக்கு பக்கத்தில் ஒட்டியது போன்று நிறுத்தவும். இந்நிலையில் இடது பக்கவாட்டில் வளைந்து படத்தில் உள்ளபடி 15 முதல் இருபது எண்ணிக்கை செய்யவும். மூச்சை இழுத்துக் கொண்டே வளையவும். மூச்சை அடக்கி 15 முதல் 20 விநாடிகள் இருந்துவிட்டு பின்னர் மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். பின்பு மாற்று ஆசனமாக இடது கையை உயர்த்தி செய்யவும். இப்படியாக வலப்பக்கம், இடப்பக்கம் மூன்று முறைகள் செய்யவும்.
பக்கவாட்டில் உள்ள அதிக தசைகளை கரைத்து இடுப்பு அழகு பெறும். கல்லீரல், உணவுப்பை நன்றாக இயங்கும். இடுப்பு வலி நீங்கும். உங்களைப் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் அழகான தோற்றமுண்டாகும். இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை மூன்று வேளை சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Friday, April 24, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்
கோமுகாசனம் என்ற ஆசனத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன ??
யோகாசனம் Friday, April 24, 2020

கோமுகாசனம் என்ற ஆசனத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன ??



செய்முறை :
விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும். இடதுகாலை மடித்து வலது தொடை மீது வைத்து, வலது பாதத்தை இடது தொடையின் பக்கத்தில் தரை மீது படியும்படி வைக்கவும். இடது கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து கையை முதுகுக்கு பின்புறம் கொண்டு வந்து முதுகை தொடவும். வலது கையை சாதாரணமாக பின்புறம் கொண்டு வந்து இடது கை விரல்களை பிடிக்க முயற்சிக்கவும். சாதாரண மூச்சில் 20 எண்ணிக்கை இருக்கவும். பின் கைகளைப் பிரித்து கால்களை பிரித்து அமரவும். மாற்று ஆசனமாக இடது காலை மடித்து, பின் வலது காலை மடித்து முன்புசெய்தது போல் செய்யவும். உங்களது எந்த கால் முட்டியின் மீது உள்ளதோ அந்த கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து பயிற்சி செய்யவும்.
பலன்கள் :
பசியில்லாமல் அவதிப்படுவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் இருந்தால் பசியிருக்காது. மலச்சிக்கல் நீங்கியவுடன் சரியாகப் பசி எடுக்கும். அஜீரணம் நீங்கும். நுரையீரல், மார்பு, இதயம் பலம் பெறுகின்றது. கை, கால்களில் ஏற்படும் வலி நீங்கும். குடலிறக்கம், விரைவீக்கம் நீங்கும். தூக்கமின்மை, கூன்முதுகு நீங்கும். தலைவலி நீங்கும். மூல வியாதி நீங்கும். மனிதனின் தோள்பட்டைகளில் காணும் ஏற்றம், இறக்கம் நீங்குகின்றது. கணையம் ஒழுங்காக இயங்குகின்றது. அதனால் நீரிழிவு வராது. வந்தாலும் நீங்கும். ரத்த ஓட்டம் சீராக உடலில் நடைபெறும். சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். தோள்பட்டை வலி நீங்கும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Friday, April 24, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Tuesday, April 21, 2020

அலை பாயும் மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஆசனம்
யோகாசனம் Tuesday, April 21, 2020

அலை பாயும் மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஆசனம்


மூச்சுக்காற்றிற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒருவர் பயம்கொள்ளும் போது மூச்சுக்காற்று தடைபடும். மனது சஞ்சலப்படும்போது மூச்சுக்காற்றும் சலனப்படுவதை கணலாம். மனதில் பய எண்ணங்கள் வரும்போது கீழ்மூச்சு,மேல்மூச்சு ஏற்படுவதை காணலாம். வாழ்க்கையில் சலிப்படையும் போதோ அல்லது மனதில் பொறாமை எண்ணம் ஏற்பட்டாலோ ”பெருமூச்சு” விடுவதை காணலாம்.
இதயநோய் உள்ளவர்கள் மனதில் அதிகளவு சந்தோஷப்படுவதோ, துக்கப்படுவதோ கூடாது என்பார்கள். ஏனெனில் இந்த அதிகப்படியான மன உணர்ச்சிகள் மூச்சுக்காற்றில் தடையை ஏற்படுத்தி அதன்மூலம் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால். ஆக மனதில் ஏற்படும் எண்ணங்கள் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துகிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Tuesday, April 21, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Monday, April 20, 2020

வயிற்று தசையை குறைக்க எளிமையான உடற்பயிற்சி உங்களுக்காக!!!
யோகாசனம் Monday, April 20, 2020

வயிற்று தசையை குறைக்க எளிமையான உடற்பயிற்சி உங்களுக்காக!!!




சென்னை: வயிற்று தசையை குறைக்க எளிமையான உடற்பயிற்சி... காலையில் வாக்கிங், மாடிப்படி ஏறி இறங்குவது என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை. வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை.
சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.
தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும்.
இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும்.
கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரித்து கொண்டே வர வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு மாதம் செய்துவந்தால் நல்ல முன்னேற்றம் தெரிவதை காணலாம். வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற தசை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Monday, April 20, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்
யோகாசனம் Monday, April 20, 2020

எந்த வயதில் எந்த மாதிரியான உடற்பயிற்சியை செய்ய வேண்டும் எனத் தெரியுமா?


நம் உடல் வயதிற்கு ஏற்ப மாற்றமடையும். அதனால் தான் ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம்.
சரி, எந்த வயதில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என்று நீங்கள் கேட்கலாம். எனவே தமிழ் போல்ட்ஸ்கை எந்த வயதில் எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் சரியான நன்மையைப் பெற முடியும் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து ஆண்கள் தவறாமல் பின்பற்றி வந்தால், வாழ்நாளின் அளவை நீட்டித்து ஆரோக்கியமாக வாழலாம்.
16-19 வயது
இந்த வயதில் ஓர் சிறுவன் மெதுவாக ஆணாக மாற ஆரம்பிப்பதால், ஹார்மோன்களின் செயல்பாடு வேகமாக இருக்கும். எனவே இந்த வயதில் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அவர்களின் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் தடகள திறன்கள் மேம்படுத்தப்பட்டு, நல்ல தடகள வீரராக ஆகும் வாய்ப்புள்ளது.
20-30 வயது
இந்த வயதில் ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அதற்கு நல்ல உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து, பயிற்றுநர் சொல்லிக் கொடுக்கும் படி பின்பற்றி வாருங்கள். மேலும் இந்த வயதில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் குறைத்து, தசைகளை வளர்க்க ஆரம்பியுங்கள். ஏனெனில் இது தான் தகைளை வளர்ப்பதற்கான மற்றும் தசைகள் வளர்வதற்கான சிறந்த வயது.
30-40 வயது
இந்த வயதில் தொப்பை வர ஆரம்பிப்பதோடு, டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைய ஆரம்பிக்கும். எனவே இந்த வயதில் HIIT உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படும்.
40-50 வயது
இந்த வயதில் தசைகளை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வது சவாலான ஒன்று. எனவே இந்த வயதில் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. தினமும் சிறிது பளுத் தூக்கும் பயிற்சி, ரன்னிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
50-60 வயது
இந்த வயதில் சைக்கிளிங் செய்யலாம் போன்று தோன்றும். ஆனால் உங்கள் தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்க, வலிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இந்த வயதில் பளுத் தூக்குவது என்பது சாதாரணமானது அல்ல. யார் ஒருவர் 20 வயதிலிருந்தே பளு தூக்கி வருகிறாரோ, அவர்களால் மட்டுமே 50 வயதிலும் பளு தூக்க முடியும். ஒருவேளை உங்களால் பளு தூக்க முடியாவிட்டால், தினமும் யோகா செய்து வாருங்கள். இதுவும் அற்புதமான ஓர் உடற்பயிற்சியே.
60-70 வயது
இந்த வயதில் நீங்கள் இன்னும் வலிமையுடன் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு, இளமையில் நீங்கள் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் தான் காரணம். எனவே இந்த வயதில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாமல், தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் நீங்கள் உங்கள் தசைகளை வலிமையுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், முடிந்த அளவிலான பளுவைத் தூக்குங்கள்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Monday, April 20, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Friday, April 17, 2020

எளிய முறை உடற் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்முறை விளக்கம்
யோகாசனம் Friday, April 17, 2020

எளிய முறை உடற் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்முறை விளக்கம்

CLICK HERE TO DOWNLOAD
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Friday, April 17, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Tuesday, April 14, 2020

நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் முத்திரைகள்
யோகாசனம் Tuesday, April 14, 2020

நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் முத்திரைகள்




சூன்ய முத்திரை செய்முறை
நிமிர்ந்து அமரவும். மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி அதன் நுனி உள்ளங்கையில் தொடட்டும் அதன் மையத்தில் பெருவிரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கையிலும் இவ்வாறு செய்யவும். (படத்தைப் பார்க்க). இரண்டு நிமிடங்கள் இருக்கவும். இதயம்,சிறுகுடல், இதயமேலுறை மிக நல்ல பிராண ஆற்றல் பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
பிரிதிவிமுத்திரை – செய்முறை
நிமிர்ந்து அமரவும். மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து தியானிக்கவும். பின் கண்ணை திறந்து மோதிரவிரல் பெருவிரல் நுனியை தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். மண்ணீரல், இரப்பை நல்ல சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
வாயு முத்திரை
நிமிர்ந்து உட்காரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல் பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து தியானிக் கவும். கண்களை திறந்து ஆள்காட்டி விரலை மடக்கி அதன் மையத்தை கட்டை விரலை வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரண்டு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். நல்ல நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.
சுத்தப்படுத்தும் முத்திரை
நிமிர்ந்து உட்காரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல் பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக் கவும். எல்லா விரல்களையும் சேர்த்து வைக்கவும். பெருவிரலினால் மோதிரவிரலின் முதல் பகுதியில் சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். சிறுகுடல், பெருங்குடல் நன்கு சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்பாற்றல் கிடைக்கும். கழிவுகள் குடலில் தங்காது. அதனால் உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும்.
பிராண முத்திரை செய்முறை
நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறக்கவும் – மோதிர விரல் சுண்டுவிரல் மடக்கி அதன் மையத்தில் பெரு விரல் நுனியை தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். சிறுநீரகம், சிறுநீரகப்பை மிக நன்றாக இயங்கும். நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.
ஆகாய முத்திரை
நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறக்கவும் நடு விரல் நுனியையும் கட்டை விரல் நுனி யையும் தொடவும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். கல்லீரல், பித்தப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.
மேற்குறிப்பிட்ட ஆறுமுத்திரைகளை தினமும் காலை, மாலை பயிற்சி செய்யுங்கள். நமது உடலில் இதயம், சிறுகுடல், மண்ணீரல், இரைப்பை, நுரையீரல், பெருங்குடல், சிறுநீரகம், சிறுநீரகப்பை, கல்லீரல், பித்தப்பை மிகச் சக்தி பெற்று இயங்கும். அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எந்த ஒரு வைரஸ்சும் தாக்காது.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Tuesday, April 14, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்
உடலை சுத்தப்படுத்தும் முத்திரை செய்வது எப்படி?
யோகாசனம் Tuesday, April 14, 2020

உடலை சுத்தப்படுத்தும் முத்திரை செய்வது எப்படி?


விரிப்பனை தரையில் விரித்து கிழக்கு முகமாக பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். பின் கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது அங்குலாஸ்தியை: அதாவது மூன்றாவது கீழ்ப்பகுதியை மெதுவாத் தொட வேண்டும். அதில் சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும். ஒரே சமயத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.
முதலில் 5 நிமிடங்கள் செய்லாம். ஒரு நாளில் காலை, மதியம், மாலை, மூன்று வேளையும் 15 நிமிடங்கள் செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும். விரிப்பில் அமர்ந்தும் செய்யலாம். நாற்காலியில் உட்கார்ந்தும் (நிமிர்ந்து அமரலும்) செய்யலாம். நீங்கள் நின்ற நிலையிலும் இதனைச் செய்யலாம். கிடைக்கின்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறி விடும்
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Tuesday, April 14, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்

Saturday, April 11, 2020

யோகாசனம் Saturday, April 11, 2020

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான யோகா பயிற்சி


செய்முறை:
விரிப்பின் மீது இரு கால்களையும் நீட்டி அமரவும்.
வலது காலை மடித்து வலது கணுக்கால் இடது கால் முட்டியை தொடும்படி பாதத்தை வைக்கவும்.
உங்கள் வலது கையை முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து கை விரல்களை வெளி நோக்கி இருக்கும்படி விரிப்பின் மீது வைக்கவும்.
இப்போது இடது கையை வலது முட்டியின் வழியாக கொண்டு வந்து வலது கால் கட்டைவிரல் பற்றி பிடிக்கவும்.
இப்போது உங்கள் தலை, தோல்பட்டை ஆகியவற்றை வலது பக்கம் திருப்பி வலது தோள்பட்டை வழியாக பார்க்கவும்.
சாதாரண மூச்சில் முப்பது எண்ணிக்கை முதலில் இருக்கவும்.
தலையை திருப்பி கட்டை விரலை விட்டு கையை பிரித்து காலை நீட்டி அமரவும்.
பின்னால் வைத்த கையையும் எடுத்து இடுப்பு பக்கத்தில் வைத்து ஓய்வு எடுக்கவும்.
இதற்கு மாற்று ஆசனமாக இடது காலை மடித்து செய்யவும்.
வலது கால் மடித்து ஒரு தடவை, இடது கால் மடித்து ஒரு தடவை செய்யவும்.
பலன்கள்:
கணையம் சிறப்பாக இயங்கும்.
தொப்பை குறையும்.
கிட்னி பலம்பெறும்.
கண் பார்வை தெளிவடையும்.
இதயம் பாதுகாக்கும்.
மன அழுத்தும் நீங்கும்.
தூக்கமின்மை சீராகும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Saturday, April 11, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்
யோகாசனம் Saturday, April 11, 2020

செரியாமை, மலச்சிக்கல் நீக்கும் யோகா


செரியாமை, மலச்சிக்கல் நீக்கும் தனுராசனம் (Indigestion & Constipation Cure Yoga – Dhanurasana)
செய்முறை:
விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
இரு கால் பாதங்களை முதுகை நோக்கி கொண்டு வந்து, கைகளை பின்னால் கொண்டு வந்து, கைகளால் காலின் கணுக்கால் பகுதியை இருக்கமாக பற்றி பிடிக்கவும்.
தலை, மார்பு, கால்கள் ஒரு சேர உயர்த்தி, மூச்சை உள் இழுத்துத் தூக்கவும்.
அடிவயிறு மட்டும் விரிப்பின் மீது இருக்க வேண்டும்.
மூச்சை அடக்கி பதினைந்து வினாடிகள் இருக்கவும்.
பின் கைகளை பிரித்து கால்களை நீட்டவும்.
சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் செய்யவும்.
மூன்று முறைகள் தினமும் செய்யவும்.

முக்கியக் குறிப்பு:
கல்லிரல் வீக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.
பெண்கள் கருவுற்ற சமயத்தில் செய்யக்கூடாது.
இருதய பலவீனம், இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது.
தனுராசனத்தின் பலன்கள்:

வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புக்கள் பலன் பெறுகின்றன.
அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது.
உடல் எடை, தொப்பை குறையும்.
வயிற்று பொருமல், உப்பசம், வாயு கோளாறுகள் குணமடையும்.
முதுகுத்தண்டு பலப்படும்.
நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா குணமாகும்.
நீரிழவு குணமாகும். கணையம் ஒழுங்காக இன்சுலினை சுரக்க செய்யும்.
கூன் முதுகு நிமிரும்.
ரத்த ஓட்டம் சிறப்பாக செயல்படும்.
பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் ஏற்படும் பெருத்த வயிறு குறைக்கும்.
மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
மாணவர்களுக்கு நியாபக சக்தி அதிகமாகும்.
சோம்பல் நீங்கும்.
அடிக்கடி கோபப்படும் குணத்தை மாற்றிவிடும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Saturday, April 11, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்
யோகாசனம் Saturday, April 11, 2020

தலை வலி நீக்கும் தலைக் கவசம் யோகா


தலை வலி நீக்கும் தலைக் கவசம் யோகா – உத்தான பாதாசனம்
செய்முறை:
விரிப்பில் நேராக படுக்கவும்.
இரு கால்களை சேர்க்கவும்.
கைகளை விரல்கள் குப்புறப்படுமாறு பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைக்கவும்.
மூச்சை உள் இழுத்துக் கொண்டே இரு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் உயர்த்தவும்.
மூச்சை அடக்கி பத்து வினாடிகள் இருக்கவும்.
பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்கவும்.
ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யவும்.
பலன்கள்:
ஜீரண உறுப்புக்கள் இருக்கம் பெற்று நன்கு வேலை செய்யும்.
உச்சி முதல் பாதம் வரை நாடி நரம்புகள் சிறப்பாக இயங்கும்.
வாயு தொந்தரவு நீங்கும்.
அஜீரண கோளாறு நீங்கும்.
மலச்சிக்கல், தலைவலி நீங்கும்.
அடி வயிற்றில் அதிகம் இருக்கும் தசைகள் குறையும். கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும் சிறுநீர்ப்பை தூண்டப்பட்டு தொந்தி இருந்தால் குறையும். இளம் மாணாக்கர்களுக்கு இது நல்லதொரு பயிற்சி. நினைவாற்றல் தூண்டப்படும்.
தமிழ்க்கடல் 0
By தமிழ்க்கடல் sdfsdfsdfsd Saturday, April 11, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags: யோகாசனம்
Older Posts Home

Total Pageviews

Created By THAMIZHKADAL | Distributed By THAMIZHKADAL