Wednesday, October 30, 2019

சிறுநீரக கற்களை வெளியேற்றும் காபி


காபி குடிப்பதால் வயிற்றில் புண், புற்றுநோய் வரும் என்ற தவறான அபிப்ராயம் உள்ளது. காபி குடிப்பதற்கும் கேன்சருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், காபி புற்றுநோயை தடுக்க கூடியது. குறிப்பாக, ஆசனவாயில் தோன்ற கூடிய கேன்சர் வராமல் தடுக்கிறது என கூறியுள்ளது.நாம் புத்துணர்ச்சிக்காக குடிக்கும் காபி, கிட்னி கல்லுக்கு மருந்தாகிறது. ஒரு ஸ்பூன் அளவுக்கு காபி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு வெட்டிவேர் சேர்க்கவும். பின்னர், தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து பருகலாம். இது சிறுநீரை பெருக்குகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கிறது. சிறுநீரக கற்களை வெளியேற்றுகிறது.

Popular Feed

Recent Story

Featured News