Search This Blog

Tuesday, October 16, 2018

ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்கு 2018 ம் ஆண்டு பண்டிகை முன் பணம் 15000 ருபாயா...?

0 comments




தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பண்டிகைகளின்
போது விழா முன்பணம் (Festival Advance) வழங்குவது வழக்கமான நடைமுறை இந்தாண்டு அது 15,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது அரசணை 341 என குறிப்பிட்டு சில நாட்களுக்கு முன்னர் இயக்கம் குறிப்பிட்டு குறுஞ்செய்தி பரவியது,அது குறித்து தலைமை செயலகத்திலுள்ள விசாரித்த போது இது போன்ற எந்தொரு தகவலும் இல்லை முற்றிலும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடன்வாங்கி வேதனையில் சிக்கிதவிக்கும் 2009 ஆசிரியர்களை இது போன்ற வதந்திகளை சில இயக்கங்கள் பரப்பி மேலும் வேதனையை கூட்டுவதாக அமைகிறது.

இயக்கம் சார்ந்து செய்திகளை தெரிவிக்கும் முன் உண்மைத்தன்மையை அறிந்து வெளியிட்டால் அனைவருக்கும் நன்மையாக இருக்கும்




செய்தி பகிர்வு

*2009&TET போராட்டக்குழு*
*மாநில தலைமை*