Search This Blog

Friday, October 19, 2018

பாஸ்ட் புட் சாபிட்டால் மூளையில் புழு வளரும்.. ! டாக்டர்கள் எச்சரிக்கை

0 comments




ஒரு எட்டு வயது சிறுமியின் மூளையில் நூற்றுக்கும் அதிகம்மான புழு முட்டைகள் இருந்தன.அடிக்கடி தலைவலி வருவதாக மகள் சொல்ல அது வெறும் சாதாரண தலை வழி தான் என பெற்றோர் நினைத்து தாங்களாகவே தலைவலி மருந்துகள் எடுத்துக்கொண்டுள்ளன.

டெல்லியை சேர்ந்த அந்த சிறுமிக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனை அதிகமானது.சுமார் இரண்டு வருடங்களில் இந்த பிரச்சனை முற்ற தொடங்கி உள்ளது. ஒரு நாள் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு மயக்க நிலையில் அந்த சிறுமியை கொண்டு வந்து சேர்த்துருகின்றனர் பெற்றோர்.

ஸ்கேன் செய்து பார்த்ததில் டாக்டர்களுக்கு அதிர்ச்சி காரணம்.மூளையில் கட்டி போல நூற்றுக்கும் அதிகம்மான நாடா புழுக்களின் முட்டைகள் இருந்துருகிறது.



உணவு உன்ன உன்ன அந்த புழுக்களின் அளவும் பெரிதாகி அந்த சிறுமியின் மூலையில் அழுத்தம் கொடுத்திருகிறது. இதனால் அந்த சிறுமிக்கு தலைவலி மற்றும் மயக்கம் உண்டாகியுள்ளதாக சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளையில் புழுக்கள் வளர காரணம் சரியாக வேக வைக்காத உணவை உண்ணும்போது இந்த பிரச்சனை ஆரம்பமாகிறது.அதிலும் முட்டைகோஸ் பயன்படுத்தப்படும் பாஸ்ட் புட் பெரும்பாலும் அரைவேக்காடு தான்.இவற்றால் மெல்ல மெல்ல புழுக்களின் தொற்று ஆரம்பமாகி அந்த தொற்று வளர்ந்து உயிருக்கே ஆபத்தாக முடியும்.இந்தியாவில் கிட்ட தட்ட 12 லச்சம் மக்களுக்கு இந்த நோய் தாக்குதல் இருக்கிறது என டெல்லியை சேர்ந்த டாக்டர் குப்தா கூறுகிறார். அசுத்தமான நீரை பருகுவது அசுத்தமான நீரில் வளர்ந்தா காய் கறிகளை உண்பது அரைவேக்காடு உணவு இது எல்லாம் இதற்க்கு காரணம் ஆகும்.