Search This Blog

Monday, April 8, 2019

ஏழாம் வகுப்புக்கு அடைவு தேர்வு

0 comments
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில அளவிலான அடைவு தேர்வு நாளை நடக்கிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் திறனை சோதிக்கும் மாநில அளவிலான அடைவு தேர்வு, நாளை நடக்கிறது. மதியம், 2:30 முதல் மாலை, 4:30 மணி வரை, அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடக்கிறது.

அனைத்து பாடங்களில் இருந்தும், 100 மதிப்பெண்களுக்கு, ஓ.எம்.ஆர்., அட்டையில் வினாக்கள் கேட்கப்படும். விடைத்தாள் திருத்தப்பட்டு குறைகள் தீர்க்க, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது