நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும் பிலிப்பைன்ஸில் எம்பிபிஎஸ் சாத்தியம் லிம்ரா நிறுவன இயக்குநர் முகமது கனி தகவல்

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், நீட் தேர்வு எழுதாத வர்கள்கூட மருத்துவப் பட்டப் படிப்பில் சேரலாம் என்று லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத் தின் இயக்குநர் முகமது கனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக, வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு வழிகாட்டி யாக இருந்து, 100-க்கும் மேற் பட்ட மருத்துவர்களை உருவாக்கி யுள்ளது. நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற பலர், பயிற்சி மையங்களில் சேர்ந்து 2-வது முறை எழுத திட்டமிடுகின்றனர். இதனால், லட்சக்கணக்கில் பணமும், ஓராண்டு காலமும் விரயமாகிறது.

இதற்கு மாற்றாக, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்கூட பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேர லாம். சேரும் முன்பு, மருத்துவப் பட்ட முன்படிப்பு படிக்க வேண்டும். இந்தியாவிலேயே ஓராண்டு காலம் இப்படிப்பு நடத்தப்படு கிறது. இதில் மருத்துவ அடிப் படை கோட்பாடுகள் கற்றுத் தரப்படுவதுடன், நீட் பயிற்சியும் அளிக்கப்படும். அடுத்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, எம்பிபிஎஸ் படிப்புக்கான தேர்வை மாணவர்கள் எழுதலாம். பின்னர், பிலிப்பைன்ஸில் 4 ஆண்டுகள் படித்து மருத்துவர் பட்டம் பெறலாம். இரு வகையில் பயன் தரும் இக்கல்வித் திட்டத்துக்கு, அமெ ரிக்க மருத்துவக் கல்வி முறை யைப் பின்பற்றும் பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகி களிடம் இருந்து லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.

அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு நீட் பயிற்சி வகுப்பு நடத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நீட் மதிப்பெண் குறைந் தாலும், காலவிரயம் ஆகாமல், மருத்துவப் படிப்பை மேற் கொள்ளும் இத்திட்டம், மருத்து வராகும் லட்சியம் கொண்ட மாணவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்று பேராசிரியர்கள், பெற்றோர் வரவேற்பு தெரிவித் துள்ளனர். 9445483333, 9444048111, 9444058111 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, மேலும் விவரம் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel