Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 8, 2020

10-வது தேர்ச்சி நபார்டு வங்கியில் வேலை


தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 73 பணியிடங்கள் உள்ள நிலையில் 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 73




பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.12.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 10,940 முதல் ரூ.23,700 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆன்லைன் முதன்மைத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 மற்றும் அறிவிப்பு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.450 செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் வழியில் செலுத்த வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nabard.org?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2412190027Final%20-%20Advertisement%20-%20Group%20C%20-Office%20Attendant%20-2019.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.