Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 26, 2020

மத்திய அரசு ஊழியர்கள் பணி விவரங்களை ஒரே தளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு.

மின்னனு- மனிதவள மேலாண்மை அமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய அறிக்கையை, மத்திய உள்துறைச் செயலாளர் ஏ.கே.பல்லா வெளியிட்டார்.

மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சிதுறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்த மின்னனு- மனிதவள மேலாண்மை அமைப்பில் (இ-எச்ஆர்எம்எஸ்) ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மத்திய உள்துறை மற்றும் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைச் செயலாளர் ஏ.கே. பல்லா வெளியிட்டார். இந்த இ-எச்ஆர்எம்எஸ் அமைப்பில், 5 தொகுப்புகளின் 25 பயன்பாடுகள் இருந்தன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பல்லா, ‘‘வரும் காலங்களில் அனைத்து அமைச்சகங்களுக்கும் இந்த இ-எச்ஆர்எம்எஸ் மிகச் சிறந்த உபகரணமாக இருக்கும். இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு உபகரணம், கொள்கைகளை உருவாக்கவும், பணியாளர் சார்ந்த விஷயங்களைக் கையாளவும் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த இ-எச்ஆர்எம்எஸ் இதர அமைச்சகங்களிலும் விரிவாக பயன்படுத்துதைப் பிரபலப்படுத்த வேண்டும்’’ என்றார்.

மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சவுத்திரி கூறுகையில் ‘‘இ-எச்ஆர்எம்எஸ் மூலம் அரசு ஊழியர்கள், தங்கள் பணி தொடர்பான அனைத்து விஷயங்களையும் மின்னணு முறையில் பெறலாம் என்பதால், இது ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

இந்த இ-எச்ஆர்எம்எஸ் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் பணி விவரப் புத்தகம், விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, சம்பளம், கடன் , முன்பணம், சுற்றுலா உட்பட பல விவரங்களை ஒரே தளத்தில் பெறலாம்.

No comments:

Post a Comment