Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 12, 2021

ஈட்டிய விடுப்பு உத்தரவில் தமிழக அரசு திருத்தம்

ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை யில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசுதிருக் தம் கொண்டு வந்தது . இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகால் மீனா வெளியிட்டார்.

அதன் விவரம் : ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் நடவ டிக்கை , கடந்த ஆண்டு ஏப்ரல் 27 - ஆம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டது. இதற்கான கேட்பு ரசீதுகள் எந்தத் தேதியில் எந்த நிலையில் இருந்தாலும் , அதனை பரிசீலிக்க வேண்டாமென உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஈட்டிய சரண் விடுப்பு தொடர்பாக ஒப்புதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்து விட்டு , அந்த விடுப்புகளை அரசு ஊழிய ரின் விடுப்புக் கணக்கில் சேர்க்கலாம் என்று தனது உத்தரவில் ஹர்சகாய் மீனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment