இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை விதியின் 55-ன் கீழ் அவசர பொது முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய கவன ஈர்ப்பு தீர்மானம்
2009க்கு பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஊதியக்குழு திரு.சித்திக் அவர்கள் பரிந்துரையை செயல்படுத்த வேண்டிய அவசியத்தை குறித்து விவாதிக்க வேண்டும். என நமது மாண்புமிகு காங்கிரஸ்
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு 1️⃣ஜே.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ மற்றும் 2️⃣ செ.ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ 3️⃣ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ4️⃣வி.எஸ்.காளிமுத்து எம்.எல்.ஏ 5️⃣ச.பாண்டி எம்.எல்.ஏ ஆகிய ஜந்து சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழக சட்டப்பேரவையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
நமக்காக குரல் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 20,000 இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
(கடைசியாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முழுவதுமாக புறக்கணித்ததால் தமிழக அரசு இதுவரை இதற்கு பதில் அளிக்கவில்லை விரைவில் அரசு சார்பில் பதில் அளிக்கப்படும் என தெரிய வருகிறது.)
தகவல் பகிர்வு
மாநில தலைமை
2009&TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு
Friday, February 12, 2021
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment