Tuesday, March 9, 2021

ஜே.இ.இ., தேர்வு முடிவுகள் வெளியீடு

என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் இணை நுழைவுத்தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான நுழைவுத்தேர்வு, கடந்த மாதம் நடந்தது. 6.05 லட்சம் பேர் தேர்வெழுதினர். 

தேர்வு முடிவுகளை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, நேற்று வெளியிட்டது. இதில், நுாறு சதவீத மதிப்பெண் பெற்று, ஆறு மாணவர்கள், முதலிடம் பிடித்துள்ளனர்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், ஜூலை, 3ம் தேதி நடைபெறவுள்ள, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர்.

No comments:

Post a Comment