'எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு, இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு வரும், 8ம் தேதி முதல் நடக்க உள்ளது.
இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் இன்று பிற்பகல் 2:00 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஹால் டிக்கெட் இன்றி தேர்வு மையம் வருவோர், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment