Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
''நீட் தேர்வு தொடர்பாக, ஆயுஷ் அமைச்சகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, விரைவில் விளக்கம் அனுப்பப்படும்,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த தீர்மானம், ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு விலக்கு தொடர்பாக, சில கேள்விகளை ஆயுஷ் அமைச்சகம், தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
இதுகுறித்து, நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், ''நீட் தேர்வு தொடர்பாக ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து, சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதற்கான பதிலை அனுப்பும் முயற்சியை, சட்டத்துறை செய்து வருகிறது. சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, இன்னும் ஓரிரு வாரத்திற்குள், ஆயுஷ் அமைச்சகத்திற்கு பதில் அனுப்பப்படும்,'' என்றார்.
முக்கிய செய்திகள்
-
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பத்து நா...
-
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூ...
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ .600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ .436 கோட...
-
வங்கி ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த யோசனையானது வாங்கி சேவைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் வங...
-
ஓட்டுநர் உரிம விதிகள்: ஜூன் 1 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகள் மாற உள்ளது. ஏதேனும் தவறு செய்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூற...
-
பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. பாதாம் பிசின் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்பட்டு வந்தாலும் இத...
-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் வரவேற்கப்படுகின்ற...
-
ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வ...
-
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத்திட்டம் வலைதளத்...
-
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க் சென்று, அந்நாட்டு கல்வித் துறை இயக்குநர்களுடன் கலந்துரையாடி, காலை உண...
IMPORTANT LINKS
Monday, January 23, 2023
நீட் தேர்வு குறித்த விளக்கம் அனுப்புகிறது தமிழக அரசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment