உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் உயர் ரத்த அழுத்த நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உணவு பழக்கத்தை மாற்றி அமைப்பது அவசியம்.
அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் வெளியிட்ட ஆய்வின்படி ரத்த நாலங்களை அமைதிப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் பூண்டு உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பூண்டில் உள்ள உட்பொருள் ரத்த அழுத்தத்திற்கு எதிராக போராடுவதால் பூண்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். அப்டோன் பழம் ரத்த அழுத்தத்தை குறைப்பதாக கூறப்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமான நொதியை செயலிழக்க வைக்கும் ஆற்றல் செம்பருத்திக்கு உண்டு.
அன்றாடம் செம்பருத்தி தேநீர் அருந்துவது சிறப்பான பலன்களை தரும். சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் இலவங்கப்பட்டை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தையும் சீர் செய்யும் பண்பு ஆலிவ் இலைக்கு உண்டு.
மருந்துகளை தவிர்த்து உணவினால் மட்டுமே இரத்த அழுத்தத்தை குறைப்பது சாத்தியம் இல்லை.
மருத்துவரின் ஆலோசனையோடு தேவையான மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தால் ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல் மற்ற உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
No comments:
Post a Comment