Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 1, 2023

தமிழ்நாட்டின் மாநில கல்விக்கொள்கை தயார் – குழுவின் தலைவர் அறிவிப்பு!



தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக துவங்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மாநில கல்விக்கொள்கை தயார் நிலையில் உள்ளதாக குழுவின் தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநில கல்விக்கொள்கை

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழகத்திலேயே பிரத்யேக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 17 பேர் கொண்ட குழுக்கள் கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகின்றனர். அதாவது, தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி 3 முதல் 5 ஆம் வயது வரை உள்ள குழந்தைகளை பிளே ஸ்கூலில் மட்டுமே சேர்க்கும் படியும், ஒன்றாம் வகுப்பில் இருந்து இருந்துதான் பள்ளி மாணவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுக்கும்படியான அடிப்படைக் கல்வியை துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் இந்த புதிய கல்விக் கொள்கையின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களின் திறன் வளர்ப்பு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் ஆகியவற்றிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கான கல்விக் கொள்கை தயார் செய்யப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய கல்விக் கொள்கையை செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment