Search This Blog

Tuesday, September 12, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ். வெளியான அசத்தல் அறிவிப்பு..!!!

0 comments
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகலவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பதவி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பதவி உயர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு சிவில் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட விதிமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றம் ஏழாவது ஊதிய குழுவின் கீழ் வரும் ஊழியர்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஊழியர்களின் சம்பளம் பாதுகாப்பு சேவை மதிப்பீடுகளில் இருந்து வழங்கப்படும். இது தொடர்பான அறிவிப்பையும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வுக்கான தகுதி ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment