JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
விளக்கம்:
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
உப்பும் ஆலோசனையும் கேட்டால்தான் கொடுக்க வேண்டும். -- இத்தாலி
பொது அறிவு :
1. சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சங்குப்பூ: சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
நீதிக்கதை
பலமே கருணை
குருகுலத்தில் குரு சீடர்களுக்கு பாடம் நடத்தி முடித்ததும், பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்றார். ஒரு சீடன், நாம் காணும் இந்த உலகம் நல்லதா? இல்லை கெட்டதா? என்று கேட்டான். அவர் அந்த சீடனிடம் எதிர்க்கேள்வியாக, நீ பூனையை பார்த்திருப்பாய் அல்லவா? அதன் பல்லால் நன்மையா; தீமையா? என்று கேட்டார். தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், இப்படி எதையோ கேட்கிறாரே? என்று குழப்பத்துடன் விழித்தான் சீடன். அவனது தவிப்பை புரிந்து கொண்ட குருவே இதற்கு பதிலளித்தார். தாய்ப்பூனையின் பற்கள் கருணையின் இருப்பிடம். ஏனென்றால், குட்டி தாயைச் சார்ந்து இருக்கும்போது, தன் பல்லாலேயே மென்மையாகக் கவ்வி தூக்கிச் செல்லும். ஆனால், எலிக்கு அதன் பற்கள் விரோதி. இது தான் உன் கேள்விக்கும் பதில். எதுவுமே நல்லது தான். அதே நேரம் எதுவுமே கெட்டது தான். அவரவரைப் பொறுத்து, நன்மையும் தீமையும் மாறிக் கொண்டேயிருக்கும். அது போல, உலகம் என்பது, நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து நல்லதாகவும் கெட்டதாகவும் காட்சியளிக்கும், என்றார். சீடனுக்கு குருவின் பதிலும் புரிந்தது. உலக நடப்பும் புரிந்தது.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment