![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifHnoJfPh2zgg6t9Wn18IwPWm52wXe2l8N7guZO7kFOtQlE2E-BIGuV1nmy2ZeXqW9t-q5Yt5oNPePaz838rVgwAwyX3J0iY_FgHfcDdvEVm767VbagysxghtnrXy69gMhn5AtE1ThpvOAXQ0ID81ZupE1GuBH7t4Vzj045DxgyvSui52iRd8Nb9nifVU/s320/pera.jpg)
மாணவர்களை 4 வகையாக பிரிப்பதுதான் சமூக நீதியா? - கல்வித்துறையினருக்கு ஐபெட்டோ கேள்வி
தமிழக ஆசிரியர் கூட் டணி மூத்த தலைவரும், அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) செயலாள ருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 2ம் பருவத் தேர்வு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் மதியம் 2 மணிக்கு மேல் வினாத் தாள்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தொடக்க பள்ளியினர், நடுநிலை பள்ளிகளுக்கு சென்று பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை இரும்பு பெட்டகத்தில் பூட்டி வைத்து தேர்வுக்கு மட்டும் வெளியே எடுத்து மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
சிபிஎஸ்இ, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை விட இந்த எண்ணும் எழுத்துத் தேர்வுகளுக்கு கடிவாளம் நீள்கிறது. ஒரே நேரத்தில் வினாத்தாள் களை டவுன்லோடு செய் வதால் சர்வர் தடுமாறுகி றது. தொடக்க கல்விக்கு பொதுத்தேர்வே வேண் டாம் என்பது நமது கொள்கை முடிவு.
ஆனால் 1,2,3,4, 5ம் வகுப்பு களுக்கு 4 விதமான வினாத்தாள்கள் என, எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு வித்தியாசமான தேர்வு சோதனை முறை, கற்றல் கற்பித்தலில் கொடுமை நிகழ்த்தப்பட்டு வருகிறது
No comments:
Post a Comment