புதுச்சேரி மாநிலத்தில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்களில் கலக்கப்படும் நிற சாயத்தில் புற்று நோயை உண்டாக்கும் வேதி பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த பஞ்சுமிட்டாய்க்கு அங்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செய்த சோதனையில் தமிழ்நாட்டில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்களிலும் புற்றுநோயை உண்டாகும் வேதி பொருள் கலந்திருப்பது தெரியவந்ததால் அது தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், கலர் சாயம் பூசப்பட்ட பஞ்சுமிட்டாய்களுக்குமட்டும் தான் தடை எனவும், வண்ணமில்லா வெண்மையான பஞ்சுமிட்டாய்க்கு தடை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Monday, February 19, 2024
தமிழகத்தில் இந்த பஞ்சு மிட்டாய்க்கு தடை இல்லை.. அமைச்சர் மா.சு விளக்கம்.!!
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment