Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 26, 2024

ஏப்ரல் 1 முதல் கர்ப்பிணிகளுக்கு ரூ14000 பெறுவது எப்படி?!

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் அரசு சார்பில் டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுநிதியுதவி திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் பதிவு செய்யப்படும். இந்த பதிவினை ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை கொடுத்து இதற்கான பிக்மி எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். இதனையடுத்து இவர்களின் வங்கிக் கணக்கில் ரூ2000 வரவு வைக்கப்படும். 4 வது மாதத்தில் 2வது தவணையாக ரூ2000 வழங்கப்படும். உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரிட்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2000 மதிப்பிலான பெட்டகம் வழங்கப்படும்.

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு 3 வது தவணையாக ரூ4000ம் குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4வது தவணையாக ரூ.4000 குழந்தைக்கு 9வது மாதம் முடிந்தவுடன் 5வது தவணையாக ரூ. 2000 என மொத்தம் ரூ.14000 ரொக்கம் மற்றும் ரூ. 4000 மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18000 மதிப்பிலான உதவிகள் வழங்கப்படுகின்றன.


இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.11,702 கோடி நிதி 1.14கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. பிரதமரின் மாத்ருவந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அத்திட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிதிஉதவி இனி மூன்றுதவணைகளில் வழங்கப்படும். அதன்படி ரூ6000 கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்ததும் 4 வது மாதத்தில் ரூ6000 மற்றும் 9 வது மாதத்தில் ரூ2000 ம் வழங்கப்பட இருக்கிறது.அத்துடன் 3 வது மற்றும் 6 வது மாதத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment