Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 29, 2024

கண் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் பழங்கால சிகிச்சை முறைகள் மற்றும் வீட்டு வைத்தியம்!

நவீன யுகத்தில், திரை மற்றும் கேஜெட்டுகள் நம் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டன.

அதிகப்படியான திரை நேரம் கண்களுக்கு சுமை ஆகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள், ஒவ்வாமை, சூரியனால் ஏற்படும் பாதிப்பு, நீரிழிவினால் உண்டாகும் ரெட்டினோபதி ஆகியவை நம் கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணங்களில் அடங்கும்.

ஆரம்பகால பார்வை இழப்பைத் தடுக்கவும், டிஜிட்டல் திரிபிலிருந்து விடுபடவும், வறண்ட, சிவப்பு மற்றும் நீர் நிறைந்த கண்கள் போன்ற நிலைமைகளைத் தவிர்க்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய தினசரி வழக்கத்தைப் பின்பற்றுவது முக்கியம்.

ஆயுர்வேதத்தின் படி, மோசமான வாழ்க்கை முறை நம் கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக, வறண்ட கண்கள், கண் எரிச்சல் போன்ற கண் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

பண்டைய மருத்துவ நடைமுறையில் பல இயற்கை வைத்தியம் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. அவை கண்பார்வையை மேம்படுத்த உதவும்.

"கண்பார்வையை மேம்படுத்துவதற்கான ஆயுர்வேத வைத்தியத்தின் பண்டைய நடைமுறை முக்கியமாக பண்டைய மூலிகைகள் மற்றும் நேத்ரா கிரியா கல்பாஸ் மற்றும் பஞ்சகர்மா போன்ற சிகிச்சைகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. நல்ல பார்வையை பராமரிக்கவும் மேம்படுத்தவும், பல தினசரி நடைமுறைகள் மற்றும் ஏராளமான ஆயுர்வேத மூலிகைகள் நம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன "என்று ஏவிபி ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சி அதிகாரி மற்றும் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பிரேம்சங்கர் கூறுகிறார்.

ஆயுர்வேத கண் ஆரோக்கிய ரகசியங்கள்:

கண்கள் மிக முக்கியமான புலனுறுப்பாக கருதப்படுகிறது. காலப்போக்கில், வயது, வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் மரபணு காரணிகள் உள்ளிட்டப் பல்வேறு தாக்கங்களால் நமது பார்வை பலவீனமடையக்கூடும்.

உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய சிகிச்சைகள் மற்றும் பண்டைய மூலிகைகளின் பட்டியலை டாக்டர் பிரேம்சங்கர் பகிர்ந்து கொள்கிறார்.

1. திரிபலா: மூன்று பழங்களின் கலவையானது திரிபலா என்று அழைக்கப்படுகிறது. இது பார்வையை மேம்படுத்தும் திறனுக்காக அறியப்பட்ட ஒரு பண்டைய தீர்வாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை கண் திசுக்களின் புத்துணர்ச்சியை ஊக்குவிக்கின்றன. திரிபலாவை வாய்வழியாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது கண் கழுவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

2. சரிவிகித உணவு: வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் பி ஆகியவற்றை உள்ளடக்கிய புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு சிறந்த பார்வையை பராமரிக்க உதவுகிறது. நெய், தேன், பார்லி, கோதுமை, பழைய அரிசி ஆகியவற்றை நம் உணவில் சேர்ப்பது நல்ல கண் ஆரோக்கியத்தைத் தக்கவைக்க உதவும்.

3. அஞ்சனா மற்றும் நஸ்யா: கண்கள் பெரும்பாலும் நோய்க்கு அதிகம் பாதிக்கப்படுகின்றன. அஞ்சனாவை (கோலிரியம்) பயன்படுத்துவது மற்றும் நாஸ்யத்தை (மூக்கு வழியாக மருந்துகளின் ஊடுருவல்) தவறாமல் பயன்படுத்துவது கண்களைப் பாதுகாக்கவும்; அதிகப்படியான கபாவை அகற்றவும் பரிந்துரைக்கப்படுகிறது.

4. பாத மசாஜ்: பாத பாதுகாப்பைப்பயன்படுத்துதல் மற்றும் பாத மசாஜ் (எண்ணெயுடன் பாத மசாஜ்) செய்வது பார்வையைப் பாதுகாக்க பரிந்துரைக்கப்படுகிறது.

5. த்ராடகம்: எரியும் நெய் தீபத்தைப் பார்ப்பது 'த்ராடகம்' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆயுர்வேத கண் உடற்பயிற்சி. உங்கள் நாளின் பத்து நிமிடங்களை ஒரு இருண்ட அறையில் உட்கார்ந்து நெய் விளக்கை வைத்து சுடர் ஏற்றி 30 டிகிரி கோணத்தில் தெரியும் ஒளியினை சீராக உற்றுப் பாருங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் பார்வை மற்றும் கண் வலிமையை மேம்படுத்தலாம்.

6. கிரியா கல்பா: மருந்து நெய் மற்றும் பிற சூத்திரங்களை உள்ளடக்கிய ஆயுர்வேத கண் சிகிச்சைகள் கிரியா கல்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தர்ப்பணம், புடபகா, சேகா, அஞ்சனா, அஸ்கியோட்டானா, பிண்டி மற்றும் பிடலகா போன்ற பல்வேறு கிரியா கல்ப சிகிச்சைகள் கண் ஆரோக்கியத்திற்கு சிகிச்சையளிப்பதிலும் பாதுகாப்பதிலும் திறன்மிக்கவை.

No comments:

Post a Comment