யோகா - இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 22-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா - இயற்கை மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா - இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) மேற்கண்ட 2 அரசு கல்லூரிகளில் 160 இடங்களும், 17 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 800-க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இதற்குமாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இப்படிப்பில் 2024-25-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கியது.
சுகாதாரத் துறையின் இணையதளத்தில் (www.tnhealth.tn.gov.in)ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம், தகவல் தொகுப்பேடு ஆகியவற்றை பதிவிறக்கம்செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்வதற்கான அவகாசம் ஜூலை 22-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ,தபால், கூரியர் மூலமாகவோ ‘செயலர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை,சென்னை-600 106’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe Us
JOIN OUR SOCIAL MIDEAS
PG TRB ONLINE TEST LINKS
Friday, July 12, 2024
Home
விண்ணப்பிக்க
யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: ஜூலை 22-ம் தேதி கடைசி நாள்
யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: ஜூலை 22-ம் தேதி கடைசி நாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment