Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 1, 2025

'கலைஞர் உரிமைத் தொகை'யை உயர்த்த அரசு ஆலோசனை - பட்ஜெட்டில் வருது அறிவிப்பு?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் தற்போது மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் பட்ஜெட்டில் அந்த தொகையை உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதில் தொகையை அதிகரிக்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசால் சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் குடும்பங்களுக்கு செலவுகள் அதிகமாகியுள்ளது. இதனால், அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் வகையில், குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கிற்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும் என 2023-24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது

தகுதிவாய்ந்த மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டது. தற்போது அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் பயனாளர்கள் நீக்கப்பட்டு, தற்போது மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சமாக குறைந்தது.

நாட்டில் முதல்முறையாக மகளிருக்கு உரிமைத் தொகை தமிழ்நாட்டில்தான் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டை தொடர்ந்து மத்திய பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. கர்நாடகாவில் ரூ.2000 குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டுக்கு பின் உதவித்தொகையை அறிவித்த மாநிலங்களில் அதிக தொகையை அறிவித்துள்ளதால், தமிழ்நாடும் தொகையை உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் 2025-26 பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000 இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதா கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய ரேஷன் கார்டை பெற்றவர்கள், பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களில் மேற்முறையீடு செய்தவர்கள் ஆகியோரும் வரும் காலங்களில் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள். இதனால் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரும் என்பதால் 2025ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பிலேயே இந்த தொகை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News