Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 2, 2025

அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு


அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, தகுதியான முதுநிலை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பதவி உயர்வில் செல்ல விரும்பும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும்.

அதேபோல், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமுடையவர்கள் சார்பான கருத்துருகளை இயக்குநருக்கு பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. மேலும், 17-பி விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை காலம் முடிவடையாத முதுநிலை ஆசிரியர்களை பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யக்கூடாது. இதில் தவறுகள் நடைபெற்றால் பரிந்துரைக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை கவனத்துடன் ஆய்வு செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment