8வது ஊதியக்குழுவிற்கான ஆயத்தப்பணிகள் முழு முனைப்புடன் நடந்துவருகின்றன. கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் கிடைக்கவுள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்
8வது ஊதியக்குழுவிற்கான ஆயத்தப்பணிகள் முழு முனைப்புடன் நடந்துவருகின்றன. கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் கிடைக்கவுள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய ஊதியக்குழுவில் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. இவற்றில் ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள முக்கியமான ஒரு கோரிக்கையை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியக்குழுவில் கம்யூடட் பென்ஷன் தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும், ஊழியர் அமைப்புகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இது மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மிகவும் பழைய கோரிக்கையாகும். இந்த ஊதியக்குழுவில் அரசு இதை அங்கீகரிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.

கம்யுடேஷன் பென்ஷன் என்றால் என்ன? இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைகும் நன்மை என்ன? இது தொடர்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கை என்ன? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை ஒரே நேரத்தில் மொத்தமாக எடுக்கும் வசதி அளிக்கப்படுகின்றது. இதற்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்திலிருந்து கழிக்கப்படுகின்றது.
கம்யூடட் பென்ஷன், அதாவது மாற்றப்பட்ட ஓய்வூதிம் 15 ஆண்டுகள் வரை மாத ஓய்வூதியத்திலிருந்து கழிக்கப்படுகின்றது. அதன் பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்குகிறது.
ஓய்வூதிய மீட்பு காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. இதற்காக ஊழியர்களும் ஊழியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இந்தப் பிரச்சினை இப்போது மீண்டும் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இது இப்போது விவாததிக்கப்பட்டு இந்த முறையாவது நிலையான முடிவு எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.
கம்யூடட் பென்ஷன் தொடர்பான இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், ஓய்வு பெற்ற ஊழியர்கள் விரைவில் தங்கள் முழு ஓய்வூதியத்தின் பலனைப் பெறத் தொடங்குவார்கள். இது வயதான காலத்தில் அவர்களுக்கு மிகவும் தேவையான நிதி நிவாரணத்தை அளிக்கும்.
முன்னதாக, 5வது சம்பளக் குழு, ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தை மூன்றில் ஒரு பங்கிலிருந்து 40% ஆக மாற்ற அனுமதித்தது. மேலும், மாற்றப்பட்ட ஓய்வூதியத்தை 12 ஆண்டுகளுக்குள் மீட்டெடுக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. ஆனால் அரசாங்கம் இந்த ஆலோசனையை ஏற்காமல் 15 ஆண்டு காலத்தையே தொடர்ந்தது.
அடுத்ததாக வந்த 6வது மற்றும் 7வது ஊதியக்குழுக்களும் இந்த விதியில் எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதின. எனினும், இப்போது 8வது உதியக்குழுவில் கம்யூடட் பென்ஷன் விதிகளில் கண்டிப்பாக மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.






No comments:
Post a Comment