Search This Blog

Sunday, January 4, 2026

TAPS - உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் - 10 சிறப்பம்சங்கள்

0 comments
TAPS - சிறப்பம்சம்

🩸 குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தால் *TAPS.* பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு இணையானது.

🦀 60 வயது முடிந்து ஓய்வு பெற்ற உடனே உடல் நலம் பாதித்து இறந்து விட்டால் *CPS* சிறந்தது

(இன்று 50 லட்சம் மிகப்பெரிய தொகையாக இருக்கலாம். பத்தாண்டுகள் கழித்து பார்க்கும் பொழுது Money value மிகவும் குறைவாக இருக்கும்)

*தீர்க்க வேண்டியது*

🔥தமிழ்நாடு அரசிடம் நாம் கட்டிய. Employee Contribution + Interest மட்டுமே உரிமையோடு கேட்டு பெறுவது

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று (ஜனவரி 3, 2026) "தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" (TAPS) என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் CPS திட்டத்தில் இருந்த நிச்சயமற்ற தன்மையை நீக்கி, அரசு ஊழியர்களுக்கு முதுமையில் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இந்த புதிய திட்டத்தின் டாப்-10 சிறப்பம்சங்கள் இதோ:

1️⃣ *50% ஓய்வூதியம் உறுதி:* நீங்கள் ஓய்வுபெறும்போது பெறும் கடைசி மாத அடிப்படை ஊதியத்தில் சரிபாதி (50%) ஓய்வூதியமாக வழங்கப்படுவது உறுதி!

2️⃣ அகவிலைப்படி *(DA)* உண்டு: பணவீக்கத்திற்கு ஏற்ப, பணியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது போலவே *6 மாதத்திற்கு ஒருமுறை* ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

3️⃣ குடும்பப் பாதுகாப்பு: ஓய்வூதியதாரர் மறைவிற்குப் பின், அவரது *குடும்பத்திற்கு 60% ஓய்வூதியம்* வழங்கப்பட்டு வாழ்வாதாரம் காக்கப்படும்.

4️⃣ குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்ச தகுதிவாய்ந்த பணியை முடித்தவர்களுக்கு மாதம் ₹10,000 ஓய்வூதியம் உறுதி.

5️⃣ பணிக்கொடை உயர்வு: பணிக்கொடை (Gratuity) *உச்சவரம்பு ₹25 லட்சமாக உயர்வு.*

6️⃣ மாநில அரசின் பொறுப்பு: சந்தை லாபம் குறைந்தாலும், ஊழியர்களுக்குச் சேர வேண்டிய முழு ஓய்வூதியத்தையும் வழங்க மாநில அரசு கூடுதல் நிதிச் சுமையை ஏற்கும்.

7️⃣ பொருளாதாரப் பாதுகாப்பு: தனியார்மயமான பங்குச்சந்தை அபாயங்களிலிருந்து அரசு ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு.

8️⃣ கருணை ஓய்வூதியம்: ஏற்கனவே CPS-ல் ஓய்வு பெற்றவர்களுக்கும் "சிறப்பு கருணை ஓய்வூதியம்" வழங்க வழிவகை.

9️⃣ நிதி நிலைத்தன்மை: மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, OPS-ன் பலன்களையும் NPS-ன் பங்களிப்பு முறையையும் இணைத்த நவீன வடிவம்.

🔟 *நிம்மதியான ஓய்வுக்காலம்*: இனி ஓய்வுக்கால ஊதியம் எவ்வளவு கிடைக்கும் என்ற கவலை தேவையில்லை;

அது அரசால் உறுதி செய்யப்பட்டுவிட்டது!

மாநிலத்தின் நிதி நெருக்கடியிலும், அரசு ஊழியர்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, சமூகப் பாதுகாப்பில் ஒரு மைல்கல்!

No comments:

Post a Comment