Subscribe Us

Saturday, July 25, 2026

பொறியியல் மாணவர் சேர்க்கை: முதல் சுற்று கலந்தாய்வில் 35,214 பேருக்கு தற்காலிக ஆணை

பொறியியல் மாணவர் சேர்க்​கை​யில் பொதுப்​பிரி​வினருக்​கான முதல் சுற்று கலந்​தாய்​வில் 35,214 மாணவர்​களுக்கு தற்​காலிக இட ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. அந்த மாணவர்​கள் தற்​காலிக ஒதுக்​கீட்டை இன்று மாலை 5 மணிக்​குள் உறு​திப்​படுத்த வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

நடப்புக் கல்வி ஆண்டு பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு ஜூலை 13-ம் தேதி​யும், சிறப்பு பிரி​வினருக்​கான கலந்​தாய்வு 15-ம் தேதி​யும் நடை​பெற்​றன.

இந்தக் கலந்​தாய்​வின் மூலம் 950 பேருக்கு இட ஒதுக்​கீட்டு ஆணை​கள் வழங்​கப்​பட்​டன. இதைத்​தொடர்ந்து பொதுப்​பிரி​வினருக்​கான முதல்சுற்று ஆன்​லைன் கலந்​தாய்​வு, கடந்த 20-ம் தேதி தொடங்​கியது.

இதில் 200 முதல் 171 கட் ஆப் மதிப்​பெண் பெற்​றவர்​கள், அரசுப் பள்ளி மாணவர்​கள், பொதுப்​பிரிவு மற்​றும் அரசுப் பள்ளி 7.5 சதவீத ஒதுக்​கீட்​டில் தகு​தி​யுள்ள அனைத்து தொழிற்​கல்வி மாணவர்​களும் கலந்​து​கொண்​டனர்.

நேற்று காலை 10 மணி வரை முதல் சுற்று கலந்​தாய்​வில் 35,214 மாணவர்​களுக்கு தற்​காலிக ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​காலிக இடஒதுக்​கீடு பெற்ற மாணவர்​கள், இன்று (சனிக்​கிழமை) மாலை 5 மணிக்​குள் தங்​கள் இடங்​களை உறுதி செய்ய வேண்​டும்.

அவ்​வாறு உறு​திப்​படுத்​தும் மாணவர்​களுக்கு நாளை (ஞா​யிறு) காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை ஆன்​லைனில் வழங்​கப்​படும் என தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை செய​லா​ளர் புருஷோத்​தமன் தெரி​வித்​துள்​ளார்​

No comments:

Post a Comment