அரசு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்வு.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்வு.
அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி அறிமுகம்; மாதம் ஒருநாள் ‘புத்தகப் பை இல்லாத நாள்' கடைப்பிடிக்கப்படும்.
2 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறன்களை உறுதி செய்ய 10.5 லட்சம் மாணவர்களுக்கு 'திறன் ப்ளஸ்' திட்டம் செயல்படுத்தப்படும்.
மாணவர்களின் தனித்துவமான கற்றலை வலுப்படுத்த ‘தன்னிலை கற்றல் திட்டம்' செயல்படுத்தப்படும்.
No comments:
Post a Comment