பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
உதவி பாதுகாப்பு அதிகாரி : 19 காலிப்பணியிடங்கள்
பாதுகாவலர் : 73 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி :
10-வது வகுப்பு தேர்ச்சி / ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
06.12.2019 அன்றைய தேதிபடி 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம் :
உதவி பாதுகாப்பு அதிகாரி : ரூ. 150/-
பாதுகாவலர் : ரூ. 100/-
பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை :
உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://recruit.barc.gov.in விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவர்ங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://bit.ly/2pXP9xx பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.12.2019