Breaking

Friday, November 29, 2019

பத்தாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை


பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
உதவி பாதுகாப்பு அதிகாரி : 19 காலிப்பணியிடங்கள்
பாதுகாவலர் : 73 காலிப்பணியிடங்கள்




கல்வித் தகுதி :

10-வது வகுப்பு தேர்ச்சி / ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

06.12.2019 அன்றைய தேதிபடி 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் :
உதவி பாதுகாப்பு அதிகாரி : ரூ. 150/-
பாதுகாவலர் : ரூ. 100/-

பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை :




உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://recruit.barc.gov.in விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவர்ங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://bit.ly/2pXP9xx பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.12.2019