Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 1, 2020

உதவி காவல் ஆய்வாளர் எழுத்து தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்திலிருந்து தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.




தற்போது இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு, தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் https://www.tnusrbonline.org வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
இதற்கான தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை தேர்வுக் குழும அதிகாரிகள் மாநிலம் முழுவதும் 32 இடங்களில் செய்து வருகின்றனர்.




காவல் பணியில் இருந்துக் கொண்டு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு 2020 ஜனவர் 11ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது. பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு 2020 ஜனவரி 12ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது.