Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 16, 2020

TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் ( காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்கள் ) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ( Office Assistant ) மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு இந்தியக் குடியுரிமையுடைய , கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதிபெற்ற விண்ண ப்பதாரர்களிடமிருந்து 10 . 01 . 2020 முதல் 07 . 02 . 2020 பிற்பகல் 5 . 45 மணி வரை விண்ண ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .








குறிப்பு :
1 ) மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை உத்தேசமானது மற்றும் மாறுதலுக்கு உட்பட்டது .
2 ) நியமனத்தின்போது பெண் விண்ணப்பதாரர்கள் போதுமான அளவு இல்லாத நேர்வில் பெண்களுக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை , தகுதி வாய்ந்த அதே வகுப்பைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும் .
3 ) ஆதரவற்ற விதவைகள் , மாற்றுத் திறனாளிகள் ( கண் பார்வையற்றோர் தவிர ) மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இந்த நியமனத்தின்போதும் பின்பற்றப்படும் .




4 ) மேற்படி சம்பள விகிதம் மற்றும் இதரப் படிகள் மேற்குறிப்பிட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர் பணிநிலை குறித்த சிறப்புத் துணைவிதிகளுக்குட்பட்டு அமையும் .
5 ) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத் துணைவிதிகளுக்குட்பட்டு பணிபுரிய வேண்டும் .
( 6 ) 1 . காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ,
II . கடன் சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு வகையான சங்கத்தில் உள்ள ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் .