கொரோனா தாக்கம் இப்போது வங்கிகளையும் விட்டு வைக்கவில்லை. வைரஸ் தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிவிப்பை இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 வரை மட்டும் செயல்படும்.
சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11 மணி முதல் 3 மணி வரை இருக்கும். பணம் எடுத்தல், கட்டுதல், காசோலை, மற்ற வங்கிகளுக்கு பணம் செலுத்துதல் பணிகள் மட்டுமே நடக்கும்.
நகைக்கடன் கிடையாது, புதிய வீட்டு கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகளும் தற்காலிகத்துக்கு இல்லை.
இவை அனைத்தும் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சில வங்கிகள் இந்த நேரத்தை அமல்படுத்த ஒரு சில தினங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment