Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 25, 2020

தேர்வு குறித்து மின்சார வாரியம் புதிய அறிவிப்பு!

கள உதவியாளர் பணி விண்ணப்ப விநியோகம் ஒத்திவைப்பு. மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவி யாளர் பணிக்கு , விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணிகள் ஒத் திவைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது . தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள 2900 கள உதவியா ளர் ( பயிற்சி ) பணிக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது . இதற்கான விண்ணப்பம் மின்வாரிய இணையதளத்தில் மார்ச் 24 - ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது . இந்நிலையில் , இந்தப் பணிகள் ஏப் . 15 - ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது .


இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு : தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நேரடி நியம னம் மூலம் கள உதவியாளர் ( பயிற்சி ) பதவிக்காக , மார்ச் 24 - ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள உதவியாளர் ( பயிற்சி ) பதவிக்கான இணைய வழியாக விண்ண ப்ப விநியோகம் ஏப் . 15 - ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது . விண்ணப்பம் பெறப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அதில் கு றிப்பிடப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment