Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 22, 2020

ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு வருமா?





மத்திய அரசு உத்தரவை பின்பற்றி , தமிழக அரசும் பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ள உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் .
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற 1ம் தேதி வரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சிபிஎஸ்இ பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தடியே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .




அதேபோன்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி ஆசிரியர்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தடியே வருகின்ற 1ம் தேதி வரை உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment