Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 16, 2016

தன்மேம்பாட்டுரை அணி


15. தன்மேம்பாட்டுரை அணி

தன்னைத் தானே புகழ்ந்துரைப்பது தன்மேம்பாட்டுரை அணி எனப்படும்.

     தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.  - தண்டியலங்காரம், 71

(.கா.)
     எஞ்சினார் இல்லை எனக்கெதிரா இன்னுயிர்கொண்டு
     அஞ்சினார் அஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப்
     பேராதவர் ஆகத் தன்றிப் பிறர்முதுகில்
     சாராஎன் கையில் சரம். -(தண்டியலங்கார மேற்கோள்)


பாடலின்பொருள்:


வீரன் ஒருவன் தன் ஆற்றலையும் வீரப்பண்பையும் வெளிப்படுத்தி உரைக்கிறான். போரில் எனக்கெதிராக நின்று போரிட்டு உயிருடன் திரும்பியோர் எவருமில்லை; ஆகவே எனக்கு அஞ்சியவர்கள் அச்சமில்லாமல் திரும்பிப் போய்விடலாம். நான் எய்யும் அம்புகள் போரில் எதிர்த்து நிற்பவர்கள் மார்பில் பாயுமே தவிரப் புறங்காட்டிச் செல்வோர் முதுகுகளில் பாயமாட்டா. இப்பாடலில் தன்னைத்தானே வீரன் புகழ்ந்து கொள்வது வெளிப்படுகிறது.