அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் ஆகியவற்றுக்கு மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளது.
ஜூன் 13 -ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வுக்கான பதிவு செய்யும் நடைமுறைகள் தொடங்கின. ஜூன்18 -ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். அதன் முடிவுகள் ஜூன் 22 -ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைமுறைகள் ஜூலை 6 -ஆம் தேதி முதல் தொடங்கும்.
கூடுதல் விவரங்களை mcc.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.