Search This Blog

Wednesday, August 29, 2018

ஆசிரியைக்கு கார் பரிசு - மாணவர்களின் பெற்றோர் அசத்தல்

0 comments
மஹாராஷ்டிராவில், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற, ௧௯ மாணவர்களின் பெற்றோர் இணைந்து, பயிற்சி அளித்த ஆசிரியைக்கு, காரை பரிசாக அளித்து, அசத்தியுள்ளனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது.



புனேயை அடுத்துள்ள ஷிருர் தாலுகாவில் உள்ள பிம்பிள் காலசா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த, ௧௯ மாணவர்கள், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை தேர்வில், சமீபத்தில் தேர்ச்சி பெற்றனர்.இதையடுத்து, இந்த மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து, பயிற்சி அளித்த ஆசிரியை லலிதா துாமலுக்கு, ஒரு காரை பரிசாக அளித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக அரசு உதவித் தொகையைப் பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சார்பில், ஆசிரியர்களுக்கு, 'பிரிஜ், பைக்' போன்றவை பரிசாக அளிக்கப்பட்டு வருகின்றன.