இதற்கிடையே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியாற்றும் 3 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக 1,400 கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
அதேபோல அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட தற்காலிக அலுவலக பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


